ஒரத்தநாடு, டிச.17 - பெண்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும், நுண்கடன் நிதி நிறு வனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியப் பேரவை யில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க ஒன்றியப் பேரவை சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் கோ.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். ஒன்றியத் துணைச் செயலாளர் அ.சௌந்தரராஜன் வரவேற் றார். ஒன்றியச் செயலாளர் கு.பாஸ்கர் வேலை அறிக்கை வாசித்தார். மாநாட்டில், புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியத் தலைவராக கோ. ஜெய்சங்கர், ஒன்றியச் செயலாளராக கு. பாஸ்கர், பொருளாளராக அ.சௌந்தர்ரா ஜன், துணைச் செயலாளர்களாக அ.கலை ஞானம், கே.கேசவன், துணைத் தலை வர்களாக சி.சக்திவேல், ஆர்.காந்தி ஆகி யோரை உள்ளடக்கிய 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி நிறைவுரை யாற்றினார். மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நூறு நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடிகளை நீக்கி, வேலை நாட்களை 150 நாட்களாகவும், கூலியையும் உயர்த்தி வழங்க வேண்டும். காலை 6 மணிக்கே பணிக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும். கடன் பெற்ற பெண்கள், பொதுமக்களிடம் அச்சுறுத் தும் வகையிலும், தகாத வார்த்தையிலும் பேசும், நிதி நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வா கமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.