districts

கும்பகோணம் எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று மகாமக திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை

கும்பகோணம்,  மே 19-

    பாரம்பரிய கலாச்சார தொன்மை மிகுந்த  கோவில் மாநகர் கும்பகோணத்தில் ஆண்டு தோறும் மாசிமகப் பெருந்திருவிழா 12 சைவ,  5 வைணவத் கோவில்களில் நடைபெறுவது வழக்கம்.  விழாவை காண ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மக்கள் குடந்தைக்கு வருகை தருகின்றனர்.

   ஆகையால் மாசிமகப் பெரு விழா நாளில் தஞ்சை மாவட்டத்திற்கு அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என  குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க  கூட்டமைப்பு மற்றும் பல்வேறு ஆன்மீக அமைப்புக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.

   இதுதொடர்பாக குடந்தை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்  சாக்கோட்டை க.அன்பழ கன் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு இக் கோரிக்கையை கொண்டு சென்றார்.

  இதனைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பு  அமைச்சரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்ச ருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிந் துரையின்படி ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமகப் பெருந்திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகாலம் நிலுவையில் இருந்த கோரிக்கையை சிறப்பாக நிறைவேற்றிக் கொடுத்த தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்  சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர்களுக்கு குடந்தை மக்கள் சார்பில் பாராட்டும் நன்றியும்  தெரிவிக்கப்பட்டது.