கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி
தஞ்சாவூர், பிப்.8- தஞ்சை மாவட்டத்தில், 4 முதல் 8 மாதம் வரையிலான கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத் தும் பணி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெற வுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக முதன்முறை யாக புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. நோய்க்கான தடுப்பூசி யை 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்று களுக்கு செலுத்தும் பணி பிப்ரவரி 28- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்திக்கொண்டால் அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இந்த தடுப்பூசி திட்டமா னது ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒருமுறை செயல்படுத் தப்படும். காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது’’ என தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு கருத்தரங்கம்
கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி தேர்வு நெறியாளர் வாழ்த்துரை வழங்கி னார். தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் செ.ரமெஷ்குமார், வேலை வாய்ப்புப் பிரிவு மற்றும் வழிகாட்டுதல் மையம் ஒருங்கிணைப்பாளர் சா. ரமேஷ், கல்லூரி நூலகர் முனைவர் ரா.சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிகிச்சை முடிந்து திரும்பியவர் பேருந்தில் மரணம்
பெரம்பலூர், பிப்.8- பெரம்பலூர் மாவட்டம் பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (60). இவர் புதனன்று (பிப்.8)உடல் நிலை சரியில்லாததால் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு புறநோயளியாக சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் ஊருக்கு அரசு பேருந்தில் திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரி வித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, பேருந்து ஓட்டுநர் சந்திரசேகரன், நடத்து நர் செல்வராஜ் ஆகியோர் பெரம்பலூர் காவல்துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 6 ஆண்டு சிறை
தஞ்சாவூர், பிப்.8- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கீழ மணக் காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (63). கூலித் தொழி லாளி. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி, 5-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும், இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். ஆனால், அந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பியோடி வந்து பெற்றோரிடம் கூறி னார். இதுகுறித்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோடடை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் உஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சுந்தர்ராஜன் வழக்கை விசாரித்து, முதிய வர் தங்கவேலுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை யும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.10 ஆயிரம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வும் உத்தரவிட்டார்.
நடுக்கடலில் மீனவர்கள் மோதல்
திருநெல்வேலி, பிப்.8- குமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த சமா தானராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீன வர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். அந்த விசைப் படகை முட்டத்தை சேர்ந்த கிறிஸ்டி என்பவர் ஓட்டினார். நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் இருந்து சுமார் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் புதன்கிழமை மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அதனை அறிந்த இடிந்த கரை மீனவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் 12 நாட்டுப்படகுகளில் கடலுக்குள் சென்றனர். அவர்கள், சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அந்த பகுதியில் தாங்கள் மீன்பிடிக்க வலை விரித்து வைத்திருப்பதாகவும், சின்னமுட்டம் மீனவர்களால் அந்த வலைகள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டதாகவும் கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர் பாக அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. அப்போது ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கு தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சின்ன முட்டம் மீனவர்கள் ஒரு வீடியோவை கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல் குழும போலீசாரிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தனர்.
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி
திருநெல்வேலி, பிப்.8- நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்ப கத்தில் உள்ள, புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கட மான், ராஜநாகம், கருமந்தி, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெ டுப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பருவ மழைக்கு பிந்தைய கணக் கெடுப்பு பணிகள் செவ் வாய்க்கிழமை தொடங்கி யது. வனத்துறை ஊழி யர்கள் 79-க்கும் மேற்பட் டோர் அடங்கிய 21 குழு வினர், களக்காடு, திருக் குறுங்குடி, கோதையாறு வனசரகங்களுக்கு சென்று கணக்கெடுப்பு பணியை தொடங்கினர். இவர்கள் வருகிற 13-ந் தேதி வரை வனப்பகுதியில் தங்கியி ருந்து செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பார்கள். பின்னர் இந்த தகவல்கள் தேசிய புலிகள் ஆணையத் திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரி வித்தனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசியல் சாசன பாதுகாப்பு மாநாடு
திருச்சிராப்பள்ளி, பிப்.8- இந்திய மாணவர் சங்க அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் சார்பில் அரசி யல் சாசன பாதுகாப்பு மாநாடு திருச்சி யில் புதனன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு கிளைச் செயலாளர் ஹரி ராமச்சந்திரன் தலைமை வகித் தார். கிளை துணை தலைவர் ஜெனி பர் வரவேற்றார். மாநாட்டை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சிவ குமார் துவக்கி வைத்தார். இந்திய மாணவர் சங்க மாநில துணை தலைவர் சம்சீர்அகமது, அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சி வழக்கறி ஞர் சங்கத்தின் தலைவர் சௌந்தர் ராஜன் வாழ்த்திப் பேசினார். இந்திய மாணவர் சங்க திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் சூர்யா, மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இசை உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். மாநாட்டில் அரசு சட்டக் கல்லூரி கிளைத் தலைவராக அழகுராஜா, கிளைச் செயலாளராக கவின்ஆதித்யா, துணைத் தலைவராக பவித்ரா, கிளை துணை செயலாளராக ஜெகன், கிளை ஒருங்கிணைப்பாளர்களாக முருகன், தொல்காப்பியன், கோகுல் சுனில், கிளாரா, வேல்முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், திருச்சி அரசு சட்டக்கல் லூரியில் விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும். சட்டக்கல்லூரி பேருந்து நிலையம் மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். சட்டக்கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்கும் வகையில் மாநில அள விலான போட்டிகள் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பிப்ரவரி 13 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவது என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.
அதிக மழை, பனிபொழிவுகளால் வாழையை தாக்கும் காஞ்சாரை நோய்
தஞ்சாவூர், பிப்.8- தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறு சுற்றுவட்டார பகுதியான கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, சாத்த னூர், கீழதிருப்பந்துருத்தி, கண்டியூர், ஈச்சங்குடி, வைரவன் கோவில், வடு கக்குடி, திருப்பழனம், காருக்குடி போன்ற காவேரி, குடமுருட்டி படுகை பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளை யும் வாழை வெளி மாநில, வெளிநாடு களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் பெய்த பருவம் தவறிய மழையாலும், அதிக பனி பொழிவுகளாலும், வாழையில் இலைக்கருகல் என்று அழைக்கப் படும். காஞ்சாரை நோய் தாக்குதல் தொடங்கியுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் என்று வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வடுகக்குடியை சேர்ந்த வாழை உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலைவர் மதியழகன் கூறு கையில், ‘‘தற்போது காஞ்சாரை நோய் தாக்குதலால், மரத்தில் பச்சை இலை கள் இல்லாமல் போகும் நிலை ஏற் பட்டுள்ளது. மூன்று மாத வாழைக் கன்றில், 15 மட்டைகள் இருக்க வேண் டிய இடத்தில், சுமார் ஆறு மட்டை கள் தான் உள்ளது. காய்கள் பிஞ்சிலேயே பழுத்து விடு வதோடு, அதன் தரமும் குறைந்து விடும். இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படும். இந்த சீசனில் அதிகளவு மழை, பனிப் பொழிவு காரணமாக, கடந்த ஆண்டு களை விட இந்த ஆண்டு நோய் தாக் கம் அதிகமாக உள்ளது. இது குறித்து வாழை ஆராய்ச்சி நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.