பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமையன்று ஆட்சியர் மரு.த.பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்), புஷ்பா தேவி (குளித்தலை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.