சாலை அமைக்கப்படுமா?
பாபநாசம், நவ.7- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - கபிஸ்தலம் சாலையி லிருந்து உள்ளே செல்கிறது அரையபுரம் தட்டுமால் படுகை. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. விளை நிலங்களும் உள்ளன. இந்தப் பகுதியில் சாலை அமைத்து 10 வருடங்கள் ஆகின்றன. இந்த சாலை குண்டும், குழியு மாகி வாகன ஓட்டிகளையும், நடந்து செல்பவர்களையும் சிரமப்படுத்துகிறது. மழை நாட்களில் சேறும், சகதியுமாகி நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. எனவே, இப்பகுதி மக்க ளின் நலன் கருதி விரைந்து சாலை அமைக்க வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ‘எல்லோருக்கும் பட்டு திட்டம்’: வாடிக்கையாளர்கள் வரவேற்பு
கும்பகோணம் நவ.7- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருபு வனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ‘எல் லோருக்கும் பட்டு’ என்ற மாத சேமிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் செயலாட்சியர் மற்றும் துணை இயக்குநர் மாதேஷ்வரன் தெரிவிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவா ளர் சங்கம் 1955 நவம்பர் 24 முதல் செயல்பட துவங்கியது. தற்போது 1,796 உறுப்பினர்களுடன் தொ டர்ந்து கடந்த 68 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் பட்டு சேலை வகைகளில், திருபுவனம் பட்டு சேலை கள் தனிச்சிறப்பு பெற்றுள்ளன. திருபுவனம் பட்டு சேலைகள் பெயரும் புகழும் பெறுவ தற்கு, இப்பகுதியில் வாழும் திறமையான நெசவாளர்களின் உழைப்பே காரணம். இச்சங்கத்தில் ஆண்டிற்கு சுமார் ரூ.40 கோடி மதிப்புள்ள பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, ரூ.52 கோடிக்கு விற்பனை நடந்து வருகிறது. இச்சங்கத்தில் 19 கிளை விற் பனை நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு புதிய ரகங்கள், டபுள் சைடு, கோர்வை ரகங்கள் மற்றும் பிளவுஸுடன் கூடிய பட்டு சேலைகள் என புதுப்புது வண்ணங்களில், டிசைன்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் கலை வண்ணத்துடன் சிறிய ரகங்கள், கோர்வை ரகங்களில் புதிய வடிவமைப்பில் அதிகளவில் உற்பத்தி செய்து, ரூ.10 ஆயி ரத்திற்கு விற்கப்படுகின்றன. முகூர்த்தப் பட்டுப் புடவைகளும் விற்கப்படுகின்றன. உங்களது பட்டு சேலையை நீங்களே உரு வாக்குதல் (make your own design) சங்கத் தின் வாடிக்கையாளர்கள், அவர்களது விருப் பத்திற்கு ஏற்றவாறு மணமகன்-மணமகள் பெயர்கள், உருவம் உருவாக்குதல் போன்ற டிசைன்கள் இணைய வழியில் பெறப்பட்டு, ஆர்டர் மூலம் சங்கத்தில் உற்பத்தி செய்து, விற்பனையாகின்றன. குறிப்பாக கடந்த ஆறு மாதங்களில் சுமார் 40 புதிய தறிகள், புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு, ரூ.60 லட்சம் மதிப்புள்ள 180-க்கும் மேற்பட்ட சேலைகள் விற்பனையாகியுள்ளன. எல்லோருக்கும் பட்டு திட்டம் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பட்டுப் புடவைகளை அனைவரும் வாங்கும் வகையில், மாத சேமிப்பு திட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. வாடிக்கையாளர்கள் அனைவரும் தரம் வாய்ந்த ஜிஐ முத்தரையுடன் தூயப் பட்டு, அசல் வெள்ளி ஜரிகை பட்டு புடவை களை சிறிது சிறிதாக பணம் செலுத்தி, எளிய தவணை முறையில் வாங்குவதற்கு ‘எல்லோ ருக்கும் பட்டு’ என்ற திட்டம் செயல்படுத்தப் படுகிறது” என்றார். - சரவணன்
ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்: திருச்சியிலிருந்து ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு
திருச்சிராப்பள்ளி, நவ.7 - அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி யின் ஆலோசனை கூட்டம் மிளகுபாறையில் நடைபெற்றது. இதில் நவம்பர் 26, 27, 28 தேதிகளில் சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத் தில் திருச்சியிலிருந்து ஆயிரம் பேர் பங்கேற் பது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங் களை திரும்ப பெற வேண்டும். உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தை 200 நாளாக்கி, நகர்ப்புறத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும். தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு, உரம், பூச்சி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி பத்து மையங்களில் கோரிக்கை விளக்க தெருமுனை பிரச்சாரம் நடத்துவது. தாலுகா தலைநகரங்களில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக நடைபெறும் பிரச்சாரத்தில், தொழிற்சங்கத்தினர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர்கள் ரெங்க ராஜன், ஜோசப் நெல்சன், செல்வம், சுரேஷ், ஞானதேசிகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.