கரூர், ஜூலை 25 -
காது கேளாதோர், வாய் பேசாதோர் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில்ம் சைகை மொழி பெயர்ப்பாளரை உடனடியாக நியமிக்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனா ளிகளின் பாதுகாப்பு சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் எஸ்.கண்ணகி வரவேற்று பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.தண்டபாணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.