தஞ்சாவூர், ஜன.10 - தஞ்சை மாவட்டத்திலேயே வறட்சி யான, மிகவும் பின்தங்கிய கிராமமான பூதலூரில், விவசாயமே பிரதான தொழில், விவசாயத்தை தவிர வேறு தொழில் கிடையாது. விவசாயத் தொழி லாளர்கள் மிக அதிகமாக வசிக்கிறார் கள். நூறு நாள் வேலையை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அதுவும் முழு மையாக கிடைப்பதில்லை. சம்பளம் சரிவர கிடைப்பதில்லை. குடிமனைப் பட்டா கேட்டு மனு கொடுத்து காத்தி ருப்பவர்கள் அதிகம் உள்ளனர். அரசு தொகுப்பு வீடு கிடைக்காமல் காத்திருப் போர் பட்டியலில் இருப்பவர்கள் ஏராளம். மேலும், கிராமப்புறத்திற்கு கிடைக்க வேண்டிய பல நலத்திட்டங்கள் பூதலூ ருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. ஆனாலும் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவ லகம், அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரி, தேசிய நெடுஞ்சாலை, ரயில் நிலையம், ரயில்வே மேம்பாலம் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் மக்கள் பிரதிநிதிகளின் முயற்சியால் பூதலூருக்கு கிடைத்துள்ளன. காத்திருப்புப் போராட்டம் ஆனால் மக்கள் வாழ்வாதாரத் திற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை. ஆகவே, முழுக்க விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழிலையுமே நம்பியுள்ள பூதலூர் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். நூறு நாள் வேலை முழுமையாக, தொடர்ச்சி யாக கிடைக்க வேண்டும். பேரூராட்சி யாக மாற்ற முயற்சிப்பதை கைவிட வேண்டும். ஊராட்சியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி பூத லூர் நான்கு ரோட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பூதலூர் தெற்கு ஒன்றியக் குழு சார்பில், வெள்ளிக் கிழமை காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், மூத்த தோழர் ராஜகோபால், கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மற்றும் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அங்கு வந்த வரு வாய்த் துறையினர், காவல் துறையினர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.