மதுரை, ஆக.20-
தமிழ்நாடு சிறைகள்- சீர்திருத்தப் பணி கள் துறை, சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு, கல்வித்திறன் மேம் பாடு, தொழிற்கல்வி, தொழிற்கூட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை, சென்னை புழல், திருச்சி 2, சேலம் மற்றும் மதுரை ஆகிய மத்தியச் சிறை களில் 6 பெட்ரோல் சில்லறை விற்பனை நிலை யங்களை நிறுவ அரசு அனுமதி வழங்கியது.
இதில், மதுரை புது ஜெயில் சாலையில் புதிதாக கட்டப்பட்ட பிரிடம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தின் திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. விழா வில் தமிழக சட்டம்- சிறைகள், சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங் கேற்று பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் பேசுகையில், ‘‘சிறைச்சாலைகள் கைதிகளை தண்டிக் கிற அல்லது கண்டிக்கிற இடமாக அமை யக் கூடாது. அவர்களை சீர்திருத்தி நல் வழிப்படுத்தும் இடமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார். அதன்படி தமிழக சிறைத்துறை கைதிகளை நல்வழிப்படுத்தும் இடமாக செயல்பட்டு வருகிறது. தற்போது சிறைகளி லேயே கைதிகளின் திறனுக்கு ஏற்ற தொழில் மற்றும் கைவினைப் பொருள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப் பட்டு சிறையில் இருந்தவாறே அவர்கள் வரு மானம் ஈட்டுவதற்கு உதவி செய்யப்படு கிறது.
மேலும் சிறையில் இருந்து வெளியே சென்றாலும் அவர்கள் தங்களது தொழில் பயிற்சியைக்கொண்டு பணிபுரியவோ தொழில் தொடங்கவோ முடியும். இதனால் கைதிகள் சிறையில் இருந்தவாறே தங்களது குடும்பத்துக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.10 ஆயிரம் வரை வருமானம் ஈட்டித் தருகின்ற னர்.
மேலும் சிறைகளில் தொடங்கப்பட்டுள்ள சிறை அங்காடிகளில் கைதிகள் தயாரிக்கும் பொருள்கள் சந்தை விலையை விட குறை வாகவும், தரமானதாகவும் விற்பனை செய் யப்படுவதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மதுரை மத்தியச் சிறையில் கைதிகளால் தயாரிக்கப்படும் சுங்குடிச் சேலைகள் தமிழகத்தின் அனைத்து சிறை அங்காடிகளிலும் அதிக மாக விற்பனையாகிறது.
கடந்த காலங்களில் சிறைவாசிகள் ஈட்டும் வருவாயில் அவர்களுக்கு 50 சதவீதம், 30 சதவீதம் அரசுக்கு, 20 சதவீதம் சிறை வாசிகள் நலத் திட்டத்துக்கு என பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் கைதிகள் ஈட்டும் வருவாயில் 80 சதவீதம் கைதி களுக்கும், 20 சதவீதம் கைதிகள் நலத்திட் டத்துக்கும் அளிக்கப்படுகிறது. மேலும் இந்த நலத்திட்ட நிதியின் மூலம் சிறையில் இருந்து வெளியே சென்று தொழில் செய்து வரும் முன்னாள் சிறைவாசிகளை கண்டறிந்து அவர்களுக்கு தலா ரூ.50 ஆயி ரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை யில் முழுவதும் பெண் கைதிகளைக் கொண்டே பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தப்படுகிறது.
தெலுங்கானாவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள்தான் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரி கின்றனர். ஆனால், தமிழகத்தில் சிறையில் இருக்கும் பெண் கைதிகளைக் கொண்டே பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தப்படு கிறது. இது கைதிகளின் நன்னடத்தையை யும் காட்டுகிறது. சிறைத்துறை சார்பில் நடத்தப்படும் தொழில்களில் கிடைக்கும் வரு வாய் மூலம் கைதிகள் தங்களது குடும்பத்தை நிர்வாகம் செய்து வருகிறார்கள். சிறைச் சாலையில் இருந்து வெளியே செல்லும் கைதிகள் தகுதிமிக்க, தரமான மனிதர் களாக உருவாக்கப்படுகிறார்கள் என்று தெரி வித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிறைகள்-சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் அம ரேஷ்புஜாரி, மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் த.பழனி, மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) அ. பரசுராமன், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர் வி.சி. அசோகன் மற்றும் உயர் அலுவலர்கள் உள் பட பலர் பங்கேற்றனர்.