districts

திருச்சி முக்கிய செய்திகள்

வண்ணார்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

திருநெல்வேலி, ஜன. 1- நெல்லை மாநகரில் பரபரப்பாக காணப்படும் பஜார்களில் ஒன்றாக  வண்ணார் பேட்டை  செல்ல பாண்டியன் மேம்பாலம் பகுதி உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் பேருந்து நிறுத்தங்கள்  செயல்பட்டு வரும் நிலையில், பேரி கார்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் ஒரு  பகுதியில் மாநகர காவல்துறை சார்பில் இரும்பு பேரி கார்டுகள் வரிசையாக வைக்கப்பட்டு அதில் தனியார் நிறுவன  விளம்பரங்கள் அமைக்கப் பட்டுள்ளது. இரவிலும்  அந்த விளம்பரங்கள் தெரியும் வகையில் அவற்றில் மின்விளக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை அதில் ஒரு இடத்தில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்ட இடத்தில் மின்கசிவால் அதில் மின்சாரம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பேரிகார்டில் பசுமாடு ஒன்று உரசிய போது எதிர்பாராத விதமாக பசுமாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து அங்கேயே பசுமாடு பரிதாபமாக இறந்தது. இதனை அந்த பகுதியில் நின்ற போலீசாரும், பொது மக்க ளும் உடனடியாக பார்த்து மின் இணைப்பை துண்டித்த னர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த வண்ணார்பேட்டை  பகுதியில் பசுமாடு மின்சாரம் தாக்கி இறந்த சம்பவத் தால்  பரபரப்பு ஏற்பட்டது.

பிளஸ் 2 மாணவியை  தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவு: மேலும் ஒருவர் கைது

குழித்துறை ,ஜன. 1- தக்கலை அருகே பிளஸ் 2 மாணவியை தூக்கி சென்று  பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார் கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஒரு பிரபல பள்ளி யில் கூலி தொழிலாளி ஒருவரின் மகள்  பிளஸ் டூ படித்து  வருகிறார்.இவர் கடந்த 25 ஆம் தேதி பள்ளியில் உள்ள  14- மாணவிகளுடன் உடற்பயிற்சி,  ஆசிரியர் திருச்சிக்கு  கைப்பந்து போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் 26- ஆம் தேதி இரவு 9-மணிக்கு பள்ளிக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது ,அவர் ஆசிரியரிடம் தந்தை இப்பொழுது வந்து விடுவார், நான் பாத்ரூம் செல்கிறேன் என கூறிவிட்டு பக்கத்தில் உள்ள ஒரு தெருவில் சென்றுள்ளார் . உடனே அங்கு நின்ற மர்ம ஆசாமி ஒருவர் இங்கு  எதற்கு வந்தாய் என கேட்டுள்ளார். கழிப்பறை செல்ல  வேண்டுமென அந்த மாணவி கூறியுள்ளார். உடனே அருகில் இருக்கும் வீட்டை காட்டி எனது  வீடு தான்  நீ மேலே மாடியில் பாத்ரூம் சென்று வா என கூறி யுள்ளார். அவர் மேலே பாத்ரூம் சென்று விட்டு கீழே  இறங்கி வந்த போது, அவரை அந்த ஆசாமி  வலுக் கட்டாயமாக இழுத்து அருகில் உள்ள ஒரு அறையில் கொண்டு சென்று  பூட்டி வைத்து பலமுறை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். சிறுமி அலறியதும் அனுப்பி உள்ளார். பின்னர் சிறுமி அழுதபடி வீட்டிற்கு சென்றுள்ளார். இது தெரிந்ததும் அதிர்ந்து போன பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், மணலிக்கரையைச் சேர்ந்த பைசல் கான் (37) என்ப வரை கைது செய்தனர். இவருக்கு உதவி செய்ததாக மணலிக்கரை மாறாங்கணத்தைச் சேர்ந்த ராஜன் மகன் ரதீஷ் போக் சோவில் கைது செய்யப்பட்டார்.

நெல்லை, தென்காசியில் பருவமழை இயல்பை விட அதிகம்

திருநெல்வேலி, ஜன. 1- தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஓரளவுக்கு சிறப்பாகவே பெய்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும் பெய் துள்ளது. தென்மாவட்டங்களை பொறுத்தவரை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவ மழை காலமான 1-10-2-24 முதல் 31-12-2024 வரையிலும் பெய்த மழையின் அளவினை கணக்கீடு செய்து பார்த்த போது மாவட்ட அளவில் தென்காசி மாவட்டம் 27- ஆவது  இடத்திலும், நெல்லை மாவட்டம் 30-ஆவது இடத்திலும் உள்ளது.  தென்காசி மாவட்டத்தில் வழக்கமாக இயல்பான மழை  அளவு 465.7 மில்லிமீட்டர் ஆகும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைகாலக்கட்டத்தில் 564.1 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இது இயல்பை விட 21 சதவிகி தம் அதிகமான மழை அளவாகும். நெல்லை மாவட்டத்தில்  இயல்பான மழை அளவு 514.9 மில்லிமீட்டர் ஆகும். ஆனால் இந்த ஆண்டு 862.3 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது. இது இயல்பை விட 67 சதவிகிதம் அதிகமாகும்.

மாஞ்சோலை வனப்பகுதியில்  தொடரும் கனமழை மணிமுத்தாறில் 2ஆவது நாளாக குளிக்க தடை

திருநெல்வேலி, ஜன. 1- நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில்  செவ்வாயன்று 2ஆவது நாளாக கனமழை பெய்தது.  இதனால் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளிலும் இடைவிடாது. கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மலை பாதையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதன்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி  நேரத்தில் பெய்த மழை கணக்கீட்டின்படி ஊத்து எஸ்டேட்டில் 18 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அங்கு  14 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில் புதன்கிழமை காலை மேலும் அதிகரித்துள்ளது. நாலுமுக்கு எஸ்டேட் டில் 16 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 15 சென்டிமீட்ட ரும், மாஞ்சோலையில் 14 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது, இந்த பகுதிகளில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால்  புதன்கிழமை 2ஆவது நாளாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை யொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அங்கு குளிக்க செல்வது வழக்கம். ஆனால் தடை விதிப்பால் அவர்கள் ஏமாற்றம்  அடைந்துள்ளனர்.

நவீன பட்டாசுகளை காட்சிப்படுத்திய புத்தாண்டு வாண வேடிக்கை

விருதுநகர், ஜன.1- விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி மை தானத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை காட்சிப் படுத்திய புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தின் பொருளா தாரத்தின் அச்சாணியாக விளங்கி வருவது  பட்டாசுத் தொழிலாகும். 100 ஆண்டுகள் கடந்தும்  இத்தொழில் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் தொடர்ந்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளின் மூலம் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.   இந்த நிலையில், பட்டாசுத் தொழிலின்  பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையி லும்,  நவீன தொழில்நுட்பங்களுடன் தயா ரிக்கப்பட்ட பட்டாசுகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் விதமாகவும் புத்தாண்டு சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் சிவகாசி சோனி மற்றும் அணில் பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட புதிய   பட்டாசு ரகங்கள் வெடிக்கப்பட்டன. வானில்  வர்ண ஜாலங்களுடன் விதவிதமான பட்டாசுகள் வெடித்துக் காண்பிக்கப்பட்டது. அப்போது, இதைக் கண்ட பொதுமக்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.   முன்ன தாக, மேடையில் பல்வேறு கலை நிகழ்ச்சி களும் நடத்தப்பட்டன.  இந்நிகழ்வில் மாவட்ட  ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட வருவாய்  அலுவலர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை
பாபநாசம் அணையில் ஒரே நாளில் 32 அடி உயர்வு

திருநெல்வேலி,  ஜன. 1- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை யில் உள்ள பாபநாசம் காரை யாறு அணை, சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் தென் மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும்  குடிநீர் தேவையை பூர்த்தி  செய்யும் முக்கிய நீர் ஆதார மாக விளங்குகின்றன. இந்த நிலையில் கடந்த  2 நாட்களாக தென் மாவட்டங் களில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை யில் அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்  கன மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணை களின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. புதன்கிழமை  நிலவரப் படி 143 அடி உச்சநீர் மட்டம்  கொண்ட பாபநாசம் அணைக்கான நீர்வரத்து 1,567 கன அடியில் இருந்து 3,581 கன அடியாக அதி கரித்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 110.45  அடியில் இருந்து சுமார் 3 சதவிகிதம் அதிகரித்து 114 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணையில் 29 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. இதே போல் 156 அடி உச்ச  நீர்மட்டம் கொண்ட சேர்வ லாறு அணை நீர்மட்டம் செவ்வாயன்று 118.86 அடி யாக இருந்த நிலையில் புத னன்று ஒரே நாளில் 6 அடி  உயர்ந்து 125 அடியாக உள்ளது. அங்கு 18 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ள ளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 622.92 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், காலை நிலவரப்படி நீர் வரத்து 2,885 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர்மட்டம் 101.94 அடியை எட்டியுள்ளது. அந்த அணை யில் 2 அடி நீர் இருப்பு அதி கரித்துள்ளது. பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கொடுமுடியாறு அணையில் 8 மில்லி மீட்ட ரும், நம்பியாற்றில் 5 மில்லி  மீட்டரும் மழை பெய்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக அழைப்பு

விருதுநகர், ஜன.1- விருதுநகர் மாவட்ட பால்வளத்துறை கட்டுப்பாட்டில் 104 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்  கள் செயல்பாட்டில் உள்ளன. இச்சங்கங்கள் மூலம் தினசரி 33.238 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படு கிறது. அதில் 13,247 லிட்டர் பால் விருதுநகர் மாவட்ட கூட்டு றவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் கொள் முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க உறுப்பினர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்  தொகை அரசால் வழங்கப்படுகிறது. பாலின் தர அடிப்ப டையில்  ஆண்டு முழுவதும் நியாயமான விலை, தீவனம்,  தாது உப்பு, கால்நடைகளுக்கு விலையில்லா மருத்துவ  சிகிச்சை, சங்க லாபத்தில் பங்கு, போனஸ், கறவை மாட்டு  கடன் பெற உதவி மானிய விலையில் பால் தர பரி சோதனை கருவிகள் சங்கங்கள் மூலம் வழங்கப்படு கிறது. எனவே, உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம். விருப்பமுள்ளோர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பால்வள துணைப்பதிவாளர் அலுவலத்தை தொட ர்பு கொள்ளலாம். மேலும் விரங்களுக்கு 63743 00818, 9499901557, 8754722264 எண்களில் தொடர்பு கொள்ள லாம் என துணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.  

புதிய பேருந்து நிலையத்தை புறக்கணித்த பேருந்தை  மறித்த 15 பேர் மீது வழக்கு

விருதுநகர், ஜன.1- விருதுநகரில் புதிய பேருந்து நிலையத்தை புறக்க ணித்து ஆத்துப்பாலம் வழியாக சென்ற பேருந்தை மறித்த  15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரையில் இருந்து சிவகாசி செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் விருதுநகரில் மீனாம்பிகை பங்களா  நிறுத்தம் சென்று, அங்கிருந்து புதிய பேருந்துநிலையம் சென்று எம்ஜிஆர் சாலை வழியாக சிவகாசி செல்ல வேண்டும். இந்த நடைமுறையை பல பேருந்து ஓட்டு நர்கள் பின்பற்றுவதில்லை. இந்த நிலையில், மீனாம்பிகை  பங்களாவில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று ஆத்துப் பாலம் வழியாக சிவகாசி சென்றது. இதையடுதது, அப்பேருந்தை தனியார் எடைநிலை யம் முன்பு மறித்து சிலர் நிறுத்தினர்.  இதனால், ஓட்டு நருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவ லறிந்து விரைந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் பேருந்தை மறித்து இடையூறு செய்த தாக மகேஸ்வரன், அன்புராஜ், பாலாஜி உள்ளிட்ட  15 பேர் மீது மேற்கு காவல்நிலைய போலீசார்  வழக்குப் பதிவு  செய்துள்ளனர்.

விருதுநகரில் பாத நரம்பு குறைபாடு கண்டறியும் சாதனம்

விருதுநகர், ஜன.1- பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் சர்க்கரை நோயாளிகளின் பாத நரம்பு குறைபாடுகளைக் கண்டறியும் சாதனம் விருது நகருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விருதுநகர், கோயம்புத்தூர், கடலூர் மாவட்டங்களில் சர்க்கரை நோயால் ஏற்படும் கால் நரம்புத்தொல்லையை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய நியூரோடச் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நீரழிவு நோயாளிகளின் பாத நரம்பு குறைபாடுகளை ஆரம்ப நிலையில் கண்டறியலாம். மேலும், உடலின் வெப்பம், குளிர்ச்சி மற்றும் அதிர்வு களை உணர முடியும். எனவே, பாத நரம்பு செயல்பாடு களில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கண்டறிய உத வும். இதற்காக விருதுநகர் மாவட்ட சுகாதார மாவட்டத்  தில் ஆமத்தூர், பாலவநத்தம், எம்.ரெட்டியபட்டி, கட்ட னூர், முடுக்கன்குளம் ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு  நியூரோடச் சாதனங்கள்  வழங்கப்பட்டுள் ளன. இதனால், சர்க்கரை நோயாளிகளின் குறைபாடு களை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து கால் இழப்புகளை  தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இராஜபாளையத்தில் வாசகர் வட்ட விழா

இராஜபாளையம், ஜன.1- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சக்க ராஜாக்கோட்டை அரசு பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் நூலகத்தில் அவ்வைத் தமிழ் மன்றமும், அக்னிச் சிறகுகள் அமைப் பும் இணைந்து நடத்திய வாசகர் வட்ட விழா நடை பெற்றது. நூலகர் முத்துலட்சுமி வர வேற்றார். முன்னாள் ராஜுக் கள் கல்லூரி முதல்வர்  வெங்கட்ராமன் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் முத்துச்சாமி, கோ.மா.  ராஜேஸ்வரி கோதண்டம் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக பங்கேற்றனர். மஞ்சு ரங்கநாதன், சீனி யம்மாள், தமிழ்ப்பித்தன் ஆகியோர் முன்னிலையில் நிழல் இலைகள், அணி லாரின் பாமாலை என்ற நூல்கள் மஞ்சு ரங்கநாதன் வெளியிட, மகேஷ் சிங்க ராஜா பெற்றுக் கொண்டார்.  சிவகாசி பட்டிமன்ற பேச்  சாளர் காளியப்பன் சிறப்பு ரையாற்ற, உலக தமிழ்  கழகத் தலைவர்  இல.நில வழகன் வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் சுபாதேவி ஏற்புரை வழங்கினார். நூலகர் வாச கர் வட்ட தலைவர் மஞ்சு ரங்கநாதன் நன்றி கூறினார்.

சிவகங்கை மருத்துவமனையில்  செயல்படாமல்  உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்குமா?

சிவகங்கை, ஜன.1- சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் செயல்படாமல் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தை உடனடி யாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும், மானாமதுரை அரசு மருத்துவ மனையில் தொடர்ந்து நீடிக்கும் மருத்து வர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் ‘எம்ஆர்ஐ ஸ்கேன்’  உள்ளது. தலைக்காயம், தலையில் ஏற்படும்  பிரச்சனைகள், நரம்பியல் கோளாறுகள் மற்றும் தசை, முதுகுத் தண்டுவடம், மூட்டு  பாதிப்பு போன்றவற்றுக்காக தினமும்  20-க்கும் மேற்பட்டோருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பது வழக்கம். மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்றுள்ள நோயாளி களுக்கு இலவசமாக எடுக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு ரூ.2,300 கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக  ‘எம்ஆர்ஐ ஸ்கேன்’ இயந்திரம் இயங்க வில்லை. இதனால், நோயாளிகளை மதுரை அரசு மருத்துவமனைக்குப் பரிந்து ரைக்கும் அவலநிலை உள்ளது. இதன் கார ணமாக விபத்துக் காயம் மற்றும் அவசர  நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளா கின்றனர்.  ஹீலியம் தீர்ந்ததால் எம்ஆர்ஐ ஸ்கேன்  எடுக்க முடியவில்லை. மும்பையில்  இருந்து ஹீலியம் வரவழைக்கப்பட்டுள் ளது. விரைவில் ‘ஸ்கேன்’ இயந்திரம் இயக்கப்படும் மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. அதேபோல மானாமதுரையில் அரசு மருத்துவமனையில் 11 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்  டுமே பணியில் உள்ளார். அந்த ஒரு  மருத்துவரும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே உள்ளார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரி டம் நேரில் மனு கொடுத்தும் எந்த நட வடிக்கையும் இல்லை.  எனவே, ஏழை - எளிய மக்கள் மருத்து வச் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யிலும், மானாமதுரை அரசு மருத்துவமனை யிலும் உள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக மருத்துவக்  கல்லூரி தலைமையிடமும் மாவட்ட செய லாளர் மோகன் நேரில் வலியுறுத்தி யுள்ளார்.

தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் தயாரித்த நிறுவனத்திற்கு ரூ.25ஆயிரம் அபராதம்

சிவகாசி, ஜன.1- சிவகாசியில் அனுமதியின்றி இயங்கிய நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப்   பைகள் தயாரிக்கப்பட்டதை கண்டறிந்த மாநகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அப ராதம் விதித்தனர். சிவகாசியைச் சேர்ந்த கல்யாண் குமா ருக்கு பள்ளபட்டி சாலையில் பாலி பேக்  நிறுவனம் உள்ளது. இங்கு ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா தலை மையில் சுகாதார அலு வலர் பாண்டியராஜன், சுகாதார ஆய்வா ளர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு மாநகராட்சி அனுமதி யின்றி நிறுவனம் இயங்கியது தெரிய வந்தது. மேலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழும் இல்லாத நிலையில் தடை  செய்யப்பட்ட நெகிழிப் பைகள் தயா ரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதி காரிகள் அந்நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம்  அபராதம் விதித்தனர்.

அரசின் செயல்பாடுகளை குறை கூற முடியாமல் தங்களுக்கு தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்கிறார்கள்

அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு சிவகங்கை, ஜன.1- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்திற்கு ஜனவரி  21 அன்று தமிழக முதல்வர் வருகை தர  உள்ளார். காரைக்குடியில் இருந்து சிவ கங்கை வரை சிறப்பான வரவேற்பளிக்க வேண்டும். நமது அரசின் செயல்பாடு எதிர்க்கட்சி யினரிடையே வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் நம் மீது குறை காண முடியவில்லை. தமிழக அரசி யல் களம் பெரியார், கலைஞர், ராஜாஜி  போன்றோரால் பக்குவப்பட்டு வளர்ந்த அர சியல் பூமியாகும். ஆனால் அரைவேக் காட்டுத்தனமாக அரசியல்வாதிகள் பக்கு வமின்றி சாட்டையால் அடித்துக் கொள்கி றார்கள். ஆட்சியின் மீது குறை கூற முடியாத தால் வயிற்றெரிச்சலில் தங்களுக்கு தாங்  களே தண்டனை கொடுத்துக் கொள்கி றார்கள். சிறிய சம்பவத்தை பூதாகரமாக கூறுகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்க ளில் பவ்வேறு சம்பவங்கள் நடந்து வரு கின்றன. மக்கள் இதனை பார்த்து கொண்டி ருக்கிறார்கள். இவர்களுக்கு தக்க பதி லடி தருவார்கள். இவ்வாறு அவர் பேசினார். திருப்பத்தூர் பேரூர் கழக செயலாளர் ஆர்.கார்த்திகேயன் நன்றி கூறினார்.