districts

img

7 வயது சிறுமிக்கு இதயத்தில் ஓட்டை திருச்சி காவேரி மருத்துவமனை நவீன சிகிச்சை முறையில் புதிய சாதனை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 2-

      அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 7  வயது சிறுமி ஒருவருக்கு இதயத்தில் பெரிய ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டது. இதை சரி செய்வதற்கு திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை வழக்கமான செயல்பாடாக இருந்தது. எனினும் திருச்சி காவேரி மருத்துவமனையில் அந்த சிறு மிக்கு புதுமையான செராபிளக்ஸ் செப்டல்  அக்லூடர் என்ற நவீன சிகிச்சை முறைக்கு  தேர்வு செய்யப்பட்டார்.

   குழந்தையின் இதயத்தில் ஏற்பட்ட  இந்த ஓட்டையை மூடுவதற்கு ஒரு புதுமை யான செராபிளக்ஸ் இடைச்சுவர் பல் பொருத்தி என்பதனை பயன்படுத்தி காவேரி ஹார்ட் சிட்டியின் குழந்தைகளுக் கான இதய இடையீட்டு சிகிச்சை குழுவி னர் வெற்றி கரமாக அந்த அறுவை சிகிச்சை யினை செய்து முடித்தனர்.  

     வர்த்தக ரீதியாக இந்த சாதனம் கிடைக்க பெற்றதற்கு பிறகு தெற்காசியா வில் முதன்முறையாக திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் பயன் படுத்தப்பட்டு இருப்பதாக இதயவியல் டாக்டர் மணிராம்கிருஷ்ணா தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘‘இந்த சிறுமிக்கு இதய குறைபாடு ஓட்டை சரியாக மூடப்படுவதற்கு செராபிளக்ஸ் சாதனம் பயன் படுத்தப்பட்டது. எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் அந்த சிறுமி அடுத்த நாளே மருத்துமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அடுத்த 3  நாட்களில் பள்ளிக்கு செல்லவும் முடிந்தது.  கடந்த 3 ஆண்டுகளில் 350- க்கும் அதிக மான இதய இடையீட்டு சிகிச்சை செயல் முறைகளை திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை மேற்கொண்டுள்ளது.

   இந்த செராபிளக்ஸ் சாதனத்தின் வெற்றிகரமான பயன்பாட்டின் மூலம் குழந்தைகளுக்கான இதயவியல் சிகிச்சை யில் சிறப்பான சாதனையை நிகழ்த்தி இருப்பதில் நாங்கள் பெருமையும், உற்சாக மும் கொள்கிறோம்’’ என்றார்.

    நிகழ்ச்சியில் மருத்துவமனை செயல்  இயக்குநர், மரு.செந்தில்குமார், மருத்து வர்கள் அரவிந்த் குமார், பிரவீன் குமார், சாந்தி, பொது மேலாளர் மாதவன், ஆ ரூஸ் நித்தியதாஸ் மெடிக்கல் இயக்குநர் சுரேஷ் வெங்கிட்டா ஆகியோர் உடனிருந்தனர்.