தஞ்சாவூர், செப்.9 - சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயி ரிழந்தனர். சென்னை, சேத்துப்பட்டு நேரு பூங்கா அருகே உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன்கள் பிராங்கிளின் (23), ஆண்டே (20), அவரது நண்பர்களான கிஷோர் (எ)தமிழரசன் (20), சென்னை சோலைப் பகுதியைச் சேர்ந்த கலைவேந்தன் (20), ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (19) ஆகிய ஐந்து பேர் உள்ளிட்ட 18 பேர், வேன் ஒன்றில், கடந்த செப்.6 அன்று நாகை மாவட் டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருக் காட்டுப்பள்ளி அருகே பூண்டியில் அமைந் துள்ள அன்னை மரியா தேவாலயத்திற்கு வழி பாட்டிற்காக வந்தனர். பிறகு தேவாலயம் அருகே சமையல் செய்துள்ளனர். அப்போது, பிராங்கிளின், ஆண்டோ, கிஷோர், கலை வேந்தன், மனோகர் ஆகிய ஐந்து பேரும், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கினர். வெகுநேரமாகியும் 5 பேரும் கரைக்கு வராததால், அவர்களுடன் வந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, கலை வேந்தன் மற்றும் கிஷோர் ஆகியோர் இறந்த நிலையில், மண் திட்டில் கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கூச்சலிட்ட னர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் துறைக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய பிராங்கிளின், ஆண்டோ, மனோகர் ஆகிய மூவரையும் தேடினர். மேலும், திரு வையாறு, தஞ்சாவூர் மற்றும் உள்ளூர் மீன வர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரத் தேடுதலுக்கு பிறகு, மனோகரை இறந்த நிலையில் மீட்டனர். மேலும், திங்களன்று பிராங்கிளின் மற்றும் ஆண்டோ ஆகியோ ரும் சடலமாக மீட்கப்பட்டனர். நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரும் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகின்றனர். தண்ணீரில், மூழ்கி உயிரிழந்த பிராங்கிளினுக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். இதுகுறித்து ஆட்சி யர் பிரியங்கா பங்கஜம் செய்தியாளர்களி டம் கூறுகையில், “வெளியூரில் இருந்து வரு பவர்கள், ஆற்றுப் பகுதி பார்ப்பதற்கு ஆழம் குறைவாக இருப்பது போன்று தெரிவதால், குளிக்க முயற்சிக்கின்றனர். ஆற்றில் இறங்கிய ஐந்து இளைஞர்களிடமும், உள்ளூர் வாசிகள் இறங்க வேண்டாம் என எச்ச ரிக்கை செய்துள்ளனர். அதையும் மீறி ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். ஆற்றில் குளிக்க வேண்டாம் என எச்ச ரிக்கை செய்து வருகிறோம். அதையும் மீறி குளிக்க செல்கிறார்கள். கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியாக மேடு, பள்ளம் இருப்பதாக கூறுகின்றனர். கொள்ளிடம் ஆற்றின் அமைப்பு இப்படித்தான் உள்ளது. இருப்பி னும் இதனை சீர் செய்ய வல்லுநர் குழு கொண்டு ஆய்வு செய்தால்தான் முடிவுகள் கிடைக்கும்” என்றார்.