திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கியாற்றின் குறுக்கே ரூ.4.6 கோடி மதிப்பீட்டில், 36 மீட்டரில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை வகித்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர், நகராட்சி ஆணையர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.