திருச்சிராப்பள்ளி, ஜூலை 24 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்ற வியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். விவசாயி களின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். தொழிற்சங் கங்கள் முன்வைத்த கோரிக்கை களை நிதி அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் புதனன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட் டச் செயலாளர்கள் சிஐடியு ரெங்க ராஜன், ஏஐடியுசி நடராஜா, ஐஎன்டியுசி வெங்கட் நாராய ணன், ஏஐசிசிடியு அருண்குமார், எச்எம்எஸ் ஆலய மணி, எல்எல்எப் தெய்வீகன், எல்டியுசி கார்த்திகன் ஆகியோர் பேசினர். தஞ்சாவூர் தஞ்சாவூர் தலைமை அஞ்சல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு மாநிலச் செய லாளர் சி.ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் என்.மோகன் ராஜ், ஏஐசிசிடியூ மாவட்டத் தலை வர் கே.ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியூசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி. சந்திரகுமார், தொமுச மாவட்டக் கவுன்சில் தலைவர் மாடாகுடி செல்வராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, செங்குட்டுவன், ஐஎன்டியுசி மாவட் டத் தலைவர் ஏ.ரவிச்சந்திரன், ஏஐசிசிடியு மாவட்டக் குழு உறுப்பி னர் கே.பாலு, தஞ்சை மாவட்ட நீதி மன்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ப.ஜீவானந்தம், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் எஸ்.சிவ ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி புதுக்கோட்டை மாவட்ட வழக்க றிஞர் சங்கத் தலைவர் வி.டி.சின்ன ராசு, வழக்கறிஞர் எஸ்.பிரபா கரன் ஆகியோர் சிறப்புரையாற்றி னார். தொமுச மாவட்டத் தலை வர் அ.ரெத்தினம், சிஐடியு மாவட் டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா மற்றும் நிர்வாகிகள் பேசி னர். மயிலாடுதுறை மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு எல்பிஎஃப் கவுன்சில் தலைவர் பொன்.நக்கீ ரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரி யப்பன், மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமானுஜம், ஏஐடியுசி மாவட் டத் தலைவர் ராஜ்மோகன், மாவட்டச் செயலாளர் ராமன், ஏஐ சிசிடியு மாவட்டச் செயலாளர் பால்ராஜ், எல்டியுசி மாவட்டச் செயலாளர் வீரசெல்வன், ஐஎன்டி யுசி மாவட்டச் செயலாளர் ராமச் சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.