மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24 ஆவது மாநாட்டின் துவக்கமாக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் - தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி, புத்ததேவ் பட்டாச்சார்யா, கொடியேறி பாலகிருஷ்ணன் மற்றும் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உள்ளிட்ட தலைவர்களுக்கான அஞ்சலி தீர்மானத்தை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி முன்மொழிந்தார். இதையடுத்து மாநாட்டு பிரதிநிதிகள் தங்களின் உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலியை மறைந்த தலைவர்களுக்கு செலுத்தினர்.