புதுக்கோட்டை, ஆக.24 - மஞ்சப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது வெள்ளிக் கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் 22 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை தாலுகா மஞ்சப்பேட்டை கிராமத் தைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை மாலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரி யம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற னர். இவர்கள் தஞ்சாவூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் வழம்பக்குடி என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிய ளவில் சென்ற போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதி யது. இந்த விபத்தில் 22 பேர் காயம டைந்தனர். இவர்களில் 17 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதில் உதயகுமார் மனைவி கவிதா, ஆசைத்தம்பி மனைவி மாலா, கோவிந்த ராஜ் மனைவி மகமாயி ஆகியோர் படுகாய மடைந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னதுரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் வலி யுறுத்தினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஒன்றியச் செய லாளர்கள் ஜி.பன்னீர்செல்வம், வி.ரெத்தின வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.