districts

img

மாற்றுத்திறனாளிகள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக்.10 -  மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும், நூறு நாள்  வேலைக்கான கூலியை மூன்று மாதமாக நிறுத்தி  வைத்துள்ளதை கண்டித்தும், ஊதியத்துடன் தாமத இழப்பீட்டு தொகையை சேர்த்து வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாநிலம்  தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.  தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலா ளர் சி.ராஜன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் ஏ.சாமியப்பன் தலைமை வகித்தனர். தஞ்சை ஒன்றியத் தலைவர் பி.சங்கிலி முத்து, மாவட்டச்  செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்ட பொருளாளர் கே.மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  ஒரத்தநாடு இந்தியன் வங்கி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியத் தலைவர்  எம்.தங்கப்பன் தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவ ரும், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் துறை ஆலோசனை குழு உறுப்பினருமான டி.கஸ்தூரி  கண்டன உரையாற்றினார். ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் டி.பாசமலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் இரண்டாம்ட புலிக்காடு இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாற்றுத் திறனாளி கள் சங்க தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் ஏ. மேனகா தலைமை வகித்தார். ஒன்றியத் தலை வர் எஸ்.ஜே.ராஜேஷ் கண்ணன் கண்டன உரை யாற்றினார். ஊரணிபுரம் இந்தியன் வங்கி முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செய லாளர் கோவி.ராதிகா தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா ளர் பி.எம். இளங்கோவன் கண்டன உரையாற்றி னார். மதுக்கூர் இந்தியன் வங்கி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கஸ்தூரி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் ஆர்.சி.பழனிவேலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியச் செயலாளர்  சி.ஏ.சந்திர பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியத்  தலைவர் எஸ்.மணிகண்டன் தலைமை வகித் தார். முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கே.  கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலா ளர் சி.எஸ்.சந்திரபிரகாஷ் கண்டன உரையாற்றி னர். ஒன்றிய செயலாளர் ஏ.வினோத் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். 

கும்பகோணம்


கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியத் தலைவர் காமாட்சி தலைமை வகித்தார். கும்ப கோணம் ஒன்றியச் செயலாளர் கே.தாமோதரன், மாவட்ட துணைத்தலைவர் பழ.அன்புமணி, மத்திய தொழிற்சங்க மைய மாவட்ட தலை வர் எம்.கண்ணன், மாமன்ற உறுப்பினர் செல்வம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே. அருளரசன் ஆட்டோ சங்க கௌரவத் தலைவர் கே.செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். திருச்சிராப்பள்ளி திருச்சி திருவெறும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செல்வ மாணிக்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை  விளக்கி ஒன்றியச் செயலாளர் சித்ரா, துணைச் செயலாளர் கார்த்திக், துணைத்தலைவர் ஸ்டா லின், மாவட்டக் குழு உறுப்பினர் பெரியசாமி, கிளைத்தலைவர் இளங்கோ ஆகியோர் பேசினர்.

மயிலாடுதுறை
 

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின்  ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், தரங்கம்பாடி  ஒன்றியத் தலைவர் ஜி.செல்வராஜ், கே. கண்ணன், ராமகுரு ஆகியோர் தலைமை வகித்த னர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் புருஷோத்த மன் உள்ளிட்டோர் உரையாற்றினர். சீர்காழி  ஸ்டேட் பாங்க் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு நகரச் செயலாளர் சுரேஷ்குமார், நாக ராஜன் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் யூனியன் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஆர்.ராஜசேகர் தலைமை வகித் தார். மாவட்ட துணை அமைப்பாளர் வி.செல்லமுத்து உரையாற்றினார்.  ஒன்றிய அமைப்பாளர்கள் ஆலத்தூர் தமிழ்செல்வன், பெரம்பலூர் பி.ரெங்கராஜ், வேப்பந்தட்டை சின்னசாமி, வேப்பூர் செங்கமலை மற்றும் துணை அமைப்பா ளர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.