districts

100 நாள் வேலையில் முறைகேடு மக்களைத் திரட்ட வலியுறுத்தல்

பெரம்பலூர், ஏப்.25-

   அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டப் பேரவை செவ்வாயன்று மாவட்டச்  செயலாளர் அ.கலையரசி தலைமையில் நடைபெற்றது. வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் அர்ச்சுணன் வர வேற்றார். மாவட்டத் தலைவர் அ.முருகேசன், ஒன்றியத்  தலைவர் கே.அமுதா, ஒன்றியச் செயலாளர் ஆர்.குமார்  உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

  மாநிலத் துணைத்தலைவர் ஜி.ஸ்டாலின் அகில இந்திய மாநாட்டு தீர்மானங்கள் குறித்துப் பேசினார். அப்போது அவர், “100 நாள் வேலைத் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. அதற்  குத் தீர்வு காண அனைத்து கிராமங்களிலும்  மக்களை அமைப்பாகத் திரட்ட வேண்டும்.

   நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகி யும் உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக நிலம்  இல்லாத  நிலை நீடிக்கிறது. உழைக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கார்ப்பரேட்டுகளுக்கு செல்வதே இதற்குக் காரணம்” என்றார்.