கரூர், ஆக.2 - கரூர் மாவட்டத்தில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 43,061 விவசாயி களுக்கு ரூ.10.265 கோடி மானிய மாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர் கள் விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வரு கிறார். குறிப்பாக, தமிழக வர லாற்றில் வேளாண்மைத் துறைக் கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேளாண் பெருங்குடி மக்களின் பொருளாதாரத்தை பன்மடங்கு உயர்த்துவதே இதன் நோக்கமாகும். தற்போது மாறிவரும் நவீன கால சூழலுக்கேற்ப இயற்கை உரங்களை பயன்படுத்தி விளை விக்கப்படும் காய்கறிகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், பொதுமக்களும் தங்கள் குடும்பத் திற்குத் தேவையான காய்கறி களை தங்கள் வீடுகளிலேயே உற்பத்தி செய்துகொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாடித் தோட்டங்களில் காய்கறி செடி வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட் டத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக் கலை பயிர்களின் பரப்பு விரி வாக்கம், நிழல்வலை கூடாரம் அமைத்தல், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கிடங்கு, காய்கறி விதைத் தளைகள், ஊட்டச் சத்து தளைகள், பழச்செடி தொகுப்பு வழங்குதல், மாடி தோட்டத் தளைகள், துல்லிய பண்ணையத் திட்டம், வாழையில் ஊடுபயிராக காய்கறிகள் சாகுபடி ஊக்கு வித்தல், தென்னையில் ஊடுபயி ராக வாழை, அரசு மாணவியர் விடு திகளில் தோட்டம் அமைத்தல், தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள், தெளிப்பான், வெற் றிலை பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற திட்டக்கூறு கள் 20,275 பயனாளிகளுக்கு ரூ. 4.28 கோடி நிதியில் மானியமாக வழங்கப் பட்டுள்ளன. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சின்ன வெங்காயம் பரப்புவிரிவாக்கம், அவகேடோ பரப்பு விரிவாக்கம், நிரந்தர பந்தல் அமைத்தல், தற்காலிக பந்தல் அமைத்தல், அங்கக பண்ணை யம், பாரம்பரிய காய்கறி ரகங்கள் சாகுபடி ஊக்குவித்தல் ஆகிய இனங்களின் கீழ் 2,360 பயனாளி களுக்கு ரூ.4.73 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. பல்லாண்டு பயிர்கள் சாகுபடி பரப்பு விரிவாக்கம், பழ செடி தொகுப்பு வழங்குதல், காளான் வளர்ப்பு குடில், காய்கறி பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தல் மற்றும் காய்கறி விதை தளைகள் வழங்கு தல் ஆகிய இனங்கள் 20,384 பய னாளிகளுக்கு ரூ. 1.135 கோடியும், தேசிய மூங்கில் இயக்கம் மூலம் 42 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மானியத்தில் மூங்கில் பரப்பு விரி வாக்கம் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 43,061 விவசாயிகள், ரூ.6.02 கோடி மதிப் பிலான மானியம் பெற்றுப் பயன டைந்துள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித் துள்ளார். மாடித் தோட்டம் அமைத்து பயனடைந்து வரும் காதப்பாறை பகுதியை சேர்ந்த குடும்பத் தலைவி உதயா பானு தெரிவிக்கை யில், “எனது சொந்த வீட்டின் மேற் புறம் மாடித்தோட்டம் மூலம் இயற்கை முறையில் காய்கறி களை விளைவிக்க வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட காலமாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முத லமைச்சர் நகர்ப்புறங்களில் வசிக் கும் பொதுமக்களின் நலன் கருதி 6 வகையான காய்கறி விதைகள் மானியத்தில் வழங்கப்படும் என வும், மேலும் அதனை வளர்ப்ப தற்கு தென்னை நார் கட்டிகள், உயிர் உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகிய வற்றை மானிய விலையில் வழங்கு கிறார்கள் என்பதை அறிந்து எனது வீட்டின் மாடியில் இயற்கை முறை யில் தோட்டத்தினை அமைத்தேன். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் எங்களின் அன்றாட குடும்ப தேவைக்குரிய காய்கறி கள் அனைத்தும் எனது மாடித் தோட்டத்தின் வாயிலாகவே கிடைத் தன. இதுபோன்று அனைத்து தரப்பி னரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என்றார்.