districts

பழனி தும்மலப்பட்டியில் சோளம், கம்பு விதைத்து நில உரிமையை நிலைநாட்டிய விவசாயிகள்!

திண்டுக்கல்,  செப். 25 - பழனி தும்மலப்பட்டியில் நில உச்சவரம்பு ஒப்படை பெற்ற விவ சாயிகள், அந்த நிலத்தில் விவசாயி கள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் தலைமையில் சோளம், கம்பு, மானாவாரி பயிர் களை விதைத்து, தங்களின் உரிமை யை நிலைநாட்டினர்.

பழனி வட்டம் தும்மலப்பட்டி பகுதியில் உபரி நில ஒப்படைதாரர் களுக்கு உடனடியாக பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

புதனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலப் பொரு ளாளர் கே.பி. பெருமாள், மாவட்டத் தலைவர் என். பெருமாள், மாவட்டச் செயலாளர் எம். ராமசாமி, மாவட்டப் பொருளாளர் தயாளன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் அமிர்தலிங்கம், மாவட்டத் தலைவர் பி. வசந்தாமணி,  மாவட்டச் செயலாளர் கே. அருள்செல்வன், பொருளாளர் ரவிச்சந்திரன்,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தா. அஜாய்கோஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜ மாணிக்கம், கமலக்கண்ணன், இடைக்கமிட்டி செயலாளர்கள் கனகு, பி. செல்வராஜ், சிவமணி, கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும்  நில மீட்புப் போராட்டம் தொடரும்!

பெ. சண்முகம்  அறிவிப்பு

தும்மலப்பட்டி நில உரிமைப் போராட்டத்திற்கு தலைமை வகித்து   தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் பெ. சண்முகம் பேசியதாவது: இந்த நிலம் தும்மலப்பட்டியைச் சேர்ந்த 37 குடும்பங்களுக்கு ஒப்படை செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த இந்த நிலத்தில் உரிமையாளர்கள் உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தங்கள் நிலத்தை கையகப்படுத்தியது தவறு என்று நீதிமன்றத்திற்குச் சென்றனர். நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 37 குடும்பத்திற்கு நிலம் சொந்தம் என்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக நில ஒப்படை செய்து, அரசு உத்தரவு வழங்கியுள்ளது. 

இந்த நிலம் உங்களுக்குத் தான் செல்லும் என்று நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் தான், நாம் இந்த நிலத்தில் இறங்கி பயிர் விதைத்துள்ளோம். வழக்கு எத்தனை ஆண்டு காலம் வேண்டுமானாலும் நடை பெறலாம். முழுமையான தீர்ப்பு வரும் வரை நாம் நமது நிலத்தில் விவசாயம் செய்வோம். 

உச்சவரம்புச் சட்டத்தின் படி, நில ஒப்படை செய்த பயனாளிகளுக்கு கடந்த 44 ஆண்டுகளாக பட்டா வழங்காமல் இருப்பது அதிகாரிகளின் தவறு. அதிகாரிகளிடம் கடுகளவு நியாயம் கூட கிடையாது. ஒரே இடத்தில் நிலத்தைக் குவிக்கக்கூடாது. குவிந்துள்ள நிலத்தை கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் உச்சவரம்பு சட்டம். 1961-ஆம் ஆண்டில் காமராஜர் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டு  இச்சட்டம் அமலில் உள்ளது. இந்த 64 ஆண்டுகளில் பல்வேறு ஆட்சியாளர்கள் வந்துள்ளனர். உபரி நிலமாக 20 லட்சம் ஏக்கர் கிடைக்கும் என்று அரசு சொன்னது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் வெறும் 2 லட்சம் பேருக்குத் தான் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் தும்மலப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியம்மாபட்டி போன்ற கிராமங்களுக்கு வழங்கப் பட்ட நிலம் தொடர்பாக வழக்குகள் உள்ளன. ஆண்டிப்பட்டி, பெரியம்மாபட்டி போன்ற கிராமங்களில் நில ஒப்படைதாரர்களுக்கு ஆதரவாக நமது சங்கம் போராடு கிறது. விவசாயிகளும், விவசாயம் செய்து கொண்டே போராடிக் கொண்டிருக் கிறார்கள். அந்த வகையில் தும்மலப்பட்டி விவசாயிகளும் போராட வேண்டும். 4 நாட்களில் பிரச்சனை தீர்ந்து விடாது. தொடர்ந்து போராட வேண்டும். தமிழ்நாட்டில் நில உச்சவரம்பின் கீழ் எடுக்கப்பட்ட நிலங்களுக்கான நில ஒப்படைதாரர்கள் தங்களின் நில உரிமையை நிலைநாட்டும் போராட்டமானது தமிழகம் தழுவிய அளவிற்கு தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு பெ. சண்முகம் பேசினார்.