கொடைக்கானலில் பாதுகாப்பு கருதி நீளமான, கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட எம்.என்.பூங்கொடி வெளியிட்டுள்ள அறிவிப்பில்; கொடைக்கானல் மலைப் பகுதியில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள நீண்ட சேசிஸ் கொண்ட பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை வருகிற நவ. 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.