சின்னாளபட்டி, மே 14- கண்மாய்கள்-கிணறுகளுக்கு நீர்வரத்து பாதித்ததால் திண்டுக்கல் மாவட்டம், நாயோடை வரத்து வாய்க்காலில் தண்ணீர் எடுத்த லாரிகளை, விவசாயிகள் சிறைப் பிடித்தனர். மெட்டூர்-பலக்கனூத்து இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடக்கின்றன. இதற்காக நாயோடை வரத்து வாய்க்கா லில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். இத னால் தெத்துப்பட்டி, சந்தமநாயக்கன்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கண்மாய் களுக்கான நீர் வரத்து பாதித்தது. இப்பகுதி யிலுள்ள கிணற்று நிலத்தடி நீர் மட்டம் வெகு வாக குறைந்து வருகிறது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின ரெட்டி யார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் தண்ணீர் எடுத்த லாரிகளை சிறைப்பிடித்தனர். நான்கு வழிச்சாலை திட்ட தொடர்பு அலுவலர் ராஜசேகர், போலீஸ் எஸ்.ஐ., சிவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். வரத்து வாய்க்காலில் தண்ணீர் எடுக்க மாட்டோம் என உறுதி யளித்ததால் லாரிகளை விடுவித்தனர்.