districts

img

அனுபவ நிலத்திற்கு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 15- நீண்ட காலமாக அனுபவத்தில் இருந்து வரும் விவசாய நிலங்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், பஞ்சப்பள்ளி ஊராட்சி, பெரியானூர் புல எண்: 16/2 இல் அரசு நிலம் 7.90 ஏக்கர்  உள்ளது. இதில், 60 ஆண்டுகள்  அனுபவத்தில் உள்ள விவசாய  நிலப்பதிக்கு பட்டா வழங்க வேண் டும். மேலும், அனுபவம் போக மீதி யுள்ள இடத்தில் தகுதியான நில மில்லா ஏழைகளுக்கு பட்டா வழங்க  வேண்டும். பணத்தை பெற்றுக் கொண்டு, தகுதியற்ற நபர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என வலி யுறுத்தி திங்களன்று பாலக்கோடு  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின்  வட்டச் செயலாளர் டி.எஸ்.ராமச் சந்திரன் தலைமை வகித்தார். இதில்  கட்சியின் மாநிலக்குழு உறுப்பின ரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பி னருமான பி.டில்லிபாபு பேசுகை யில், பெரியானூர் கிராமத்திலுள்ள  அரசு நிலத்தின் ஒருபகுதியில் சுமார் 65 ஆண்டுகளாக  விவசாயம் செய் யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சரின் தூண்டு தலின்பெயரில், வருவாய்த்துறை அலுவலர்கள் அனுபவ நிலத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்து வருகின்ற னர். மேலும், அங்குள்ள விவசாயி களை அராஜகமாக வெளியேற்ற முயற்சி செய்வது சட்டப்படி தவறா கும்.

வருவாய்த்துறையைச் சேர்ந்த  சில‌ அலுவலர்கள், ஏற்கனவே பல  ஏக்கர் நிலமும், பல லட்சம் மதிப் புள்ள வீடும் உள்ளவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, சட்ட விரோதமாக இச்செயலில் ஈடுபட்டு  வருகின்றனர். இதனை ஒருபோதும்  மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்காது. அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு தொடர்ந்து போராடும். மேலும், அனுபவ நிலம் போக  மீதியுள்ள இடத்தில், ஏழை மக்க ளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா  வழங்க வேண்டும், என்றார். முன் னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.நாகராசன், வட்டக்குழு உறுப் பினர்கள் ஜி.நக்கீரன், பி.கோவிந் தசாமி, பி.காரல் மார்க்ஸ், சி.ராஜா,  வி.சக்திவேல், பி.ஆறுமுகம், சி. கோவிந்தராஜ், என்.சந்திரசேகரன், பி.முருகன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.