தருமபுரி, ஜூலை 4- நீட், கியூட் போன்று நுழைவுத் தேர்வுகளின் குளறுபடி செய்யும் தேசிய தேர்வு முகமையை கண் டித்து, இந்திய மாணவர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட், கியூட், யுஜிசி, நெட் பேன்ற பொது நுழைவுத்தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகளை செய் யும் தேசிய தேர்வு முகமை (NTA)யை கண்டித்தும், நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் வியாழனன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். அதன்ஒருபகுதியாக தரும புரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பவித்ரன், மாவட்டத் தலைவர் சினேகா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாவேல், ராகுல், மாணவர் சங்க சட்டக்கல்லூரி நிர்வாகிகள் நர்மதா தேவி, அரவிந்த், ஜீவா, சத்தியராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இதில், மாணவர் சங்க முன் னாள் மாவட்டச் செயலாளர் குப் பன், வாலிபர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் குறளரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளை துணைச்செயலாளர் சஞ்சய் தலைமை வகித்தார். இதில், சங்கத் தின் மாவட்டச் செயலாளர் தே.சர வணன், மாவட்டத் தலைவர் மு. தங்கராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தனுஷ், கார்த்தி உட் பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், பெருந் துறை புதிய பேருந்து நிலையத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலை வர் நவீன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சரவ ணன், மாநில செயற்குழு உறுப்பி னர் பிரவின் மாவட்டச் செயலாளர் ரஞ்சித், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் முகில் சுகுணா, பைரவி உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.