வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு
அரியலூர்,அக்.20 - அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டி யல் அக்.27 அன்று வெளியிடப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து 1.1.2024 ஆம் நாளை தகுதி நாளாக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் பொருட்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைத் திருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்ற வற்றுக்கு விண்ணப்பிக்க அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நவ.4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
எனவே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை புதிதாக சேர்க்க, ஏற்கனவே பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர பிழைகளை திருத்தம் செய்வ தற்கான படிவங்களை, அந்தந்த வாக்குச்சாவடி மையங்க ளில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவ லர்களிடம் பெற்று, பூர்த்தி செய்து அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித் துள்ளார்.
மாவட்ட அளவிலான போட்டிகள்:
கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
கும்பகோணம், அக்.20- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டியில் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி யின் தமிழ்த்துறை முதுகலை முதலாம் ஆண்டு மாணவி அ.நூர்ஆகாஸ்பீ முதலிடம் பெற்றார்.
வினாடி-வினா போட்டியில் கணிதத் துறை முதுஅறிவியல் முதலாம் ஆண்டு மாணவர் சே.கார்த்தி முத லிடம் பெற்றார். கட்டுரைப் போட்டியில் தமிழ்த்துறை முதுகலை முதலாம் ஆண்டு மாணவி வ.வைஷ்ணவி 2 ஆம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் அ.மாதவி பாராட்டினார்.
ஆவின் இனிப்பு பொருட்கள் விற்பனை துவக்கம்
தஞ்சாவூர், அக்.20 - தஞ்சாவூர் இராசராசன் மணிமண்டபத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெள்ளிக்கிழமை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இராசராசன் மணிமண்டபத்தில் பூங்கா அமைத்தல், நடைபாதை அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள், சிமெண்ட் இருக்கைகளை சரிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சரியாக, விரைந்து மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார்.
பின்னர், நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் செயல் படுகிற ஆவின் பால் பதப்படுத்தும் இயந்திர சாதனங்களை ஆட்சியர் பார்வையிட்டு, பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் விதம் குறித்து ஆய்வு செய்தார். தீபாவளியை முன்னிட்டு ஆவின் இனிப்பு பொருட்களான நெய், பாதாம் பவுடர், சாக்லேட், மைசூர் பாக்கு, பால்கோவா போன்ற பொருட்களை பார்வையிட்டு, வாடிக்கையா ளர்களுக்கு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தீபாவளியை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகள், ஆவின் முகவர்கள், பாலகங்கள், நேரடி நுகர்வோர் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரி வித்தார்.