districts

img

விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

தஞ்சாவூர், பிப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையுடன் இணைந்து, கள்ளச் சாராயத் தினால் ஏற்படும் தீமைகள் குறித்து, பள்ளி மாணவ-மாணவியர்கள் இடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.  இதில், கட்டுரைப் போட்டி யில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த, ஆல டிக்குமுளை அரசு உயர்நி லைப் பள்ளி 8 ஆம் வகுப்பு  மாணவி க.தர்ஷினி முதலி டம், புதுத்தெரு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி இ.காயத்ரி இரண்டாமிடம் பெற்றனர்.  ஓவியப் போட்டி யில், மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி இ.ராஜஸ்ரீ முதலிடம், ஆலடிக்குமுளை அரசு உயர்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் ஜெ.நசீர் முகமது இரண்டாம் இடம் பெற்றனர்.  பேச்சுப் போட்டியில் பட்டுக்கோட்டை புனித இச பெல் மேல்நிலைப்பள்ளி 11  ஆம் வகுப்பு மாணவி கே. கீர்த்தனா முதலிடம், பட்டுக் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி பா.வசந்தி இரண்டாமிடம், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி 11 ஆம் வகுப்பு மாணவி சுப்ரியா மூன்றாமிடம் பெற்றனர்.  வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு பட்டுக் கோட்டை மாவட்டக் கல்வி  அலுவலர் கு.திராவிடச் செல்வம் காசோலை, பாராட் டுச் சான்றிதழ் வழங்கி, பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அப் போது பள்ளிகளின் தலைமை  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரி யர்கள் உடனிருந்தனர்.