districts

தஞ்சை அருகே செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு 6 பேர் கைது

தஞ்சாவூர், பிப்.13 - தஞ்சாவூரில், போலி மதுபான ஆலையை  காவல்துறையினர் கண்டுபிடித்து அதற்கு சீல்  வைத்து 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.  தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டி பகுதி களில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படு வதாக,  கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா கந்தபுனேனி உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான சிறப்பு  தனிப்படையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் ஒதுக்குப்புறமான பகுதியில் போலி  மதுபான ஆலை இயங்கி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனிப் படையினர் அக்குடோனுக்குள் அதிரடியாக நுழைந்து, தப்பிக்க முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தஞ்சை பொட்டுவாச்சாடி வடக்கு தெருவைச் சேர்ந்த மெல்வின் சகாய ராஜ் (41) என்பவர் குமரேசன் என்பவருக்குச்  சொந்தமான மேற்படி இடத்தை மாத வாடகை யாக ரூ.5,000 என வாய்மொழியாக ஒப்புக் கொண்டு வாடகைக்கு எடுத்து கடந்த 2 மாதங்க ளாக அங்கே போலி மதுபான ஆலை நடத்தி  வந்துள்ளது தெரிய வந்தது.

 அதற்காக புதுச்சேரி மாநிலம் காரைக்கா லில் இருந்து மதுபானம் தயாரிக்கத் தேவை யான மூலப் பொருட்களை கொண்டுவந்து மதுபானங்கள் தயாரித்து, போலி ஸ்டிக்கர் கள் ஒட்டி வெளியே கள்ளச் சந்தையில் அதிக  விலைக்கு விற்று வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.  மேலும் இந்த போலி மதுபான ஆலை யில், தஞ்சை விளார் சாலையைச் சேர்ந்த  புத்தறிவு (எ) அறிவழகன் (30), மாரியம் மன் கோயில் பகுதியைச் சேர்ந்த அருண்பாண் டியன் (32), திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா திருக்கண்ணமங்கையைச் சேர்ந்த  சூளை (எ) முத்துக்குமார் (29), புதுச்சேரி  மாநிலம் காரைக்காலை நேரு நகரைச் சேர்ந்த  பாபு (எ) விஜயகுமார் (42), காரைக்கால் அருகேயுள்ள கோவில்பத்து ஜோதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பழனியப்பன் (38)  ஆகியோர் வேலைபார்த்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலி மதுபான ஆலை யில் இருந்து 650 மதுபாட்டில்கள், 2000 காலி  மதுபாட்டில்கள், 2 மூட்டைகளில் மதுபாட்டில்  மூடிகள், பிளாஸ்டிக் கேன்கள், மதுபானம்  தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட் கள், டாடா இண்டிகா கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து, போலி மதுபான ஆலைக்கு சீல் வைத்தனர்.  காவல்துறையால் கைது செய்யப் பட்டுள்ள மெல்வின் சகாயராஜ் உள்ளிட்ட 6  பேரும் கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு  வழக்குகளில் தொடர்பு உள்ளவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.