districts

img

சாதிச் சான்றிதழ் இல்லாததால் மேற்படிப்புக்கு செல்ல முடியவில்லை அதிகரிக்கும் குழந்தை திருமணம்; வேலைக்குச் செல்லும் சிறார்கள்

தஞ்சாவூர், ஜூன் 5-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை தாலுகா துறவிக்காடு கடை வீதியில் இருந்து சுமார் ஒரு கி.மீட்டர்  தொலைவில் உள்ளது எம்ஜிஆர் நகர். இங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பங் களைச் சேர்ந்த, ஆதிவாசி பழங்குடி  இனத்தைச் சேர்ந்த பூம்பூம் மாட்டுக் காரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, அங்குள்ள கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால், கரை ஓரத்தில் குடிசைகள் அமைத்து குடி யிருந்து வருகின்றனர்.  இவர்கள் குடியிருக்கும் பகுதி யில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இவர்களில் பெரும்பாலானோர் திருஷ்டி பொம்மைகள் விற்கும் பணி யிலும், தப்பு, டிரம்ஸ் செட் அடிக்கும்  பணியிலும், பெண்கள் சாலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து விற்கும் பணியிலும் ஈடு பட்டு வருகின்றனர்.  இங்குள்ள பிள்ளைகள் சாதிச்  சான்றிதழ் இல்லாததால், எட்டாம்  வகுப்புக்கு மேல் படிக்க முடிவதில்லை.  குறிப்பாக, பெண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே திருமணமாகியும், சிறுவர்கள் ஏதாவது கிடைக்கும் வேலைக்கும் சென்றுவிடுகின்றனர்.  இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த பட்டு, மாரியம்மாள் ஆகி யோர் கூறுகையில், “அரசு எங்களுக்கு  நிலப்பட்டா வழங்கியுள்ளது. ஆனால்  இதுவரை இடத்தை அளந்து தர வில்லை.

எங்களுக்கு இடத்தை அளந்து, அரசு வீடு கட்டி தர வேண்டும். எங்கள் மூதாதையர்கள் பூம்பூம் மாடு தொழில் செய்து வந்த நிலையில், தற்போது கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறோம். மேலும் திருஷ்டி பொம்மைகள் தயா ரித்து விற்பனை செய்து வருகிறோம்.  நாங்கள் இந்து ஆதியன் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு அரசு உரிய சாதி சான்றிதழ் வழங்கினால், எங்கள் குழந்தைகள் மேற்படிப்பு படிக்க உதவியாக இருக்கும்.  சாதிச் சான்றிதழ் இல்லாததால் எங்கள் பிள்ளைகள் வாழ்க்கை வீணாகி வருகிறது. 13 வயதிலேயே பெண் குழந்தைகள் திருமணமாகிச் சென்று விடுகின்றனர். ஆண் குழந் தைகள் கூலி வேலைக்குச் சென்று விடுகின்றனர். எங்களுக்கு அரசு சாதி சான்றிதழ் வழங்கினால், எங்கள் குழந்தைகள் படிக்கவும், எங்கள் வாழ்க்கை முன்னேற்றமடையவும் உதவியாக இருக்கும்” என்றனர். இதேபோல் ஒட்டங்காடு, பட்டுக் கோட்டை, ஆலடிக்குமுளை ஆகிய இடங்களிலும் சாதிச் சான்றிதழ் இல்லாததால், இந்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் படிப்பு வீணாகி  வருகிறது. 

குழந்தை திருமணம் 
துறவிக்காடு எம்ஜிஆர் நகரில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு சிறுவயதிலேயே திரு மணமாகி விட்டது என தெரிவிக்கின்ற னர். சிறுவர்களும் குழந்தைப் பருவத்திலேயே வேலைக்கு செல் கின்றனர். மேலும் மழைக் காலங் களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர்  தேங்கி நிற்பதால் மிகவும் அவதிப் பட்டு வருவதாக வேதனை தெரி வித்துள்ளனர்.
சிபிஎம் கோரிக்கை 
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் இதுகுறித்து ஆய்வு  செய்து, உரிய சான்றிதழ் வழங்க வும், இம்மக்களுக்கு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யச் செயலாளர் எம்.இந்துமதி, ஒன்றி யக்குழு உறுப்பினர் ஏ.வி.குமார சாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள் ளனர்.