districts

img

உடன்குடி சில்லுக் கருப்பட்டி விற்பனை அமோகம்

தஞ்சாவூர், ஜூன் 12-  தஞ்சாவூர் மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாராகும் சில்லுக் கருப் பட்டி விற்பனை சூடு பிடித்துள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  வட்டத்தில் உள்ள உடன்குடியில் வட்டுக்  கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி, மண்டை  வெல்லம், பனங்கற்கண்டு உள்ளிட் டவை தயாரிக்கப்படுகின்றன. உடன்குடி  கருப்பட்டி சுத்தம், சுவைக்கு பெயர் பெற்றது. கருப்பட்டி மருத்துவ குணம் நிறைந்தது. சர்க்கரைக்கு மாற்றாகவும் இதனைப் பயன்படுத்துகின்றனர். பனை  மரத்திலிருந்து பெறப்படும், பதநீரை  காய்ச்சி, இந்த கருப்பட்டி தயாரிக்கப்படு கிறது. மண்டை வெல்லம் கிலோ 150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி,  சுக்கு, மிளகு, ஏலக்காய் சேர்த்து தயாரிக் கப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த சுக்கு கருப்பட்டி எனப்படும் சில்லுக் கருப்பட்டி, கிலோ 240 ரூபாய்க்கும், அதேபோல் பனங்கற்கண்டு கிலோ 240 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பேராவூரணி பகுதிக்கு புதிதான இந்த பனைத் தயாரிப்புகளை பொதுமக்கள் ஆர்வமுடன் விரும்பி வாங்கிச் செல் கின்றனர்.  இதுகுறித்து, திருச்செந்தூரை சேர்ந்த  கருப்பட்டி விற்பனை செய்யும் அண்ணா துரை கூறுகையில், “தூத்துக்குடி பகுதி யில் இருந்து ஆம்னி வேன் மூலம் பனைத்  தயாரிப்பு பொருட்களான கருப்பட்டி, பனைவெல்லம், சுக்கு கருப்பட்டி ஆகிய வற்றை கொண்டு வந்து, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருகிறோம்.  வியாபாரம் நன்றாக உள்ளது. பொது மக்கள் உடலுக்கு கேடு தரும் சீனிக்கு  மாற்றாக இதனை விரும்பி வாங்கி செல் கின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும், உடலுக்கு கேடு விளை விக்காத பனை பொருட்கள் மீது பொது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.  திருச்செந்தூர் பகுதி விவசாயி களான நாங்கள் விவசாயப் பணி முடிந்த தும், இதுபோல் பனை பொருட்களை வாங்கிச் சென்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று விற் பனை செய்து வருகிறோம். நான்கு மாதம் மட்டுமே நடைபெறும் நெல் விவ சாயத்தில், போதிய அளவு வருமானம் இல்லாத நிலையில், பிள்ளைகள் படிப்பு,  குழந்தைகள் திருமண செலவிற்காக வும், இதுபோல் 8 மாதம் வியாபாரம் செய்து சேமிக்கும் பணத்தில்தான் எங்கள்  வாழ்வாதாரம் நடக்கிறது” என்றார்.