districts

சுனாமி நிவாரண திட்டத்தில் முறைகேடு: ஒப்பந்ததாரருக்கு 3 ஆண்டு சிறை

தஞ்சாவூர், ஜூன் 18   சுனாமி நிவாரண திட்டப் பணியின் கீழ் வேலைகள் மேற்கொண்டதில் முறைகேடு செய்ததாக ஒப்பந்ததாரருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் திட்டங்களின் கீழ் வேலைகள் மேற்கொள்வதற்கு ஒப்பந்ததாரர் பி. சண்முகத்துக்கு மாவட்ட சுனாமி திட்டச் செய லாக்க அலகு 2009, மே 11 ஆம் தேதி ஒப்பந்தம் வழங்கியது. அதற்காக அரசின் வழி காட்டுதலின்படி அரசுக்கு வங்கிக் கணக்கு தொடர்புடைய பிணையப் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும்.  இதன்படி ஒப்பந்ததாரர் சண்முகம் ரூ.90,000 மதிப்புள்ள போலியான வங்கி பிணையப் பத்திரங்களை (வேலை ஒப்பந்த மதிப்பு ரூ.34.71 லட்சத்தில் 2.5 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்ட தொகை) அரசிடம் ஒப்படைத்ததாகவும், சண்முகம் மீது நடவ டிக்கை எடுக்குமாறும், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு வந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி காவல்  பிரிவின் புலன் விசாரணைக்கு மாற்றப்பட்டது.  இது தொடர்பாக திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதி மன்றம் விசாரணை செய்து, சண்முகத்துக்கு 3  ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அப ராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித் தது. இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசா ரணை செய்து, தண்டனை பெற்று தந்த தஞ்சா வூர் மாவட்ட சிபிசிஐடி பிரிவினரை சென்னை  தலைமையக சிபிசிஐடி காவல் தலைவர் கே.ஜோஷி நிர்மல்குமார், மத்திய மண்டல சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் தில்லை  நடராஜன் ஆகியோர் பாராட்டினர்.