districts

தஞ்சை சீர்மிகு நகரத் திட்டப் பணிகள்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர் ஆய்வு

தஞ்சாவூர், ஏப்.22 - தஞ்சை மாநகராட்சியில் செயல்படுத் தப்பட்டு வரும் சீர்மிகு நகரத் திட்டப் பணிகள் குறித்து ஒருநபர் விசாரணை குழு அலுவலர் தஞ்சையில் ஆய்வு செய்தார்.

பொலிவுறு நகரத் திட்டம்
தமிழகத்தில் 12 மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத் திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. அதில் தஞ்சை மாநகராட்சியும் ஒன்று. இதில் பல பணிகள் முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வரப்பட்டுள்ளது. இன்னும்  பல பணிகள் முழு வீச்சில் நடைபெற்று  வருகின்றன. இந்த பணிகள் அனைத் தும் 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்நிலையில், சீர்மிகு நகரத் திட்டப்  பணிகள் குறித்தும், அவை செயல்படுத் திய விதம் மற்றும் இப்பணிகளால் பொது மக்களுக்கு ஏற்படும் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து  ஆய்வு செய்து அறிக்கை வழங்கிட ஓய்வு  பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் டேவிதார்,  தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு தமிழக அரசினால் அமைக்கப் பட்டது.

விசாரணை குழு அலுவலர் ஆய்வு
அதனடிப்படையில் கடந்த 2 நாட்களாக தஞ்சை மாநகராட்சி பகுதி யில் நடைபெற்று வரும், சீர்மிகு நகரத் திட்ட பணிகளை விசாரணைக் குழு அலு வலர் டேவிதார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் செயல்ப டுத்தப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், சூரிய ஒளி மின்சக்தி திட்டம், பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர் வழங்கல் திட்டப் பணிகள் உள்ளிட்ட 103  எண்ணிக்கையிலான அனைத்து திட்டப் பணிகளையும் அவர் நேரடியாக ஆய்வு  மேற்கொண்டார். மேலும் தஞ்சை பழைய ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும்  அருங்காட்சியகப் பணிகள், தஞ்சை  மாநகராட்சிக்கு குடிநீர் வழங்குவதற் காக கொள்ளிடம் ஆற்றில் மேற்கொள் ளப்பட்டு வரும் பணிகளையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.974 கோடியில் பணிகள்
தஞ்சை மாநகராட்சியில் ரூ.974. 58 கோடி திட்ட மதிப்பீட்டில் மேற்கொள் ளப்பட்டு வரும் இப்பணிகளில் தற்போது ரூ.146.17 கோடி மதிப்பிலான 35 எண்ணிக்கையிலான திட்டப் பணி கள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வரப் பெற்றுள்ளது. மேலும்  ரூ.828.41 கோடி மதிப்பிலான 68 எண்ணிக் கையிலான பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அனைத்தும் சரியான திட்டமிடலுடன், உறுதியாகவும், தரமா கவும் அமைத்து தர வேண்டும் என்றும்  பொதுமக்களுக்கு பயன்தரும் வகை யில் திட்டப்பணிகள் அமைத்து தர  வேண்டும் எனவும் மாநகராட்சி அலுவ லர்களுக்கு உரிய அறிவுரைகளை டேவிதார் வழங்கினார். இந்த ஆய்வு தொ டர்பான அறிக்கையினை, விசாரணை குழு அதிகாரி டேவிதார், தமிழக அரசி டம் வழங்க உள்ளார்.