தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - கபிஸ்தலம் சாலையில் ஆர்.எஸ். மஹால் அருகில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதுமட்டுமின்றி, இந்த குப்பைகளை தீயிட்டு எரித்து விடுகின்றனர். இதிலிருந்து எழும் புகையால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.