தஞ்சாவூர், ஜன.10 - கல்வி உதவித்தொகை 2021-2022 தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனி யார் கல்வி நிலையங்களில் பதினொன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி., படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில் நுட்பக் கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லா மிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ-மாணவியர்களிடமிருந்து 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித் தொகை பெறுவதற்கான விண்ண ப்பங்களை www.scholarships.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க 15.1.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவி யர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சிறு பான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவ, மாணவியர்களிடமிருந்து வரப் பெற்ற விண்ணப்பங் களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும் எனவும் தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ - மாண வியரின் விண்ணப்பத்தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும், தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். சரிபார்க்க கடைசி தேதி பள்ளி படிப்பு உதவித் தொகை - 15.1.2022. பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை - 31.1.2022. கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்து உள்ளார்.