தஞ்சாவூர், ஏப்.3- “கச்சத்தீவு என்கிற பாஜகவின் அரசியல் வேடம், தேர்தல் வேட மாகும்; அந்த வேடமானது, நமது பெரியார் மண்ணான தமிழ்நாட் டில் எடுபடாது” என பள்ளிக் கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி யுள்ளார். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் ஆர். சுதாவுக்கு வாக் குச்சேகரித்து, தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அன்பில் மகேஷ் பிரச் சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கச்சத்தீவு பற்றி 2015-இல் பாஜக வினர் என்ன பேசினர் என்பது அனைவருக்கும் தெரியும். இதை விவாதப் பொருளாகக் கொண்டு செல்ல பார்க்கின்றனரே தவிர, அதில் நிகழ்ந்த உண்மை என்ன என்பது அவர்களுக்கு தெரிய வில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட் டுக் கொண்டு வராமல் இப்போது பேசுகிறார். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அங்கொன்றும், இங் கொன்றுமாகத் தான் மீனவர்கள் பிரச்சனை இருந்து வந்தது.
ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் நிறைய மீனவர்களைச் சிறையில் அடைப் பதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் நிகழ்கின்றன. இலங் கைக்கு பிரதமர் அடிக்கடி சென்று வந்தபோது, இதைப் பற்றி பேசி யிருக்கலாம். ஆனால், அப்போது அதைப் பற்றி பேசாமல் இப்போது தேர்தல் வந்திருப்பதால் எல்லாமே கண் ணுக்கு தெரிகிறது. இதை மக்க ளும் குறிப்பாக மீனவர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் போடும் வேடங்கள் எல்லாம் இந்தப் பெரி யார் மண்ணில் எடுபடாது.