கும்பகோணம் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க முன்னாள் நகர செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான குருசாமி - ஆனந்தி ஆகியோரது மகள் மதுசங்கரிக்கும், மணமங்கலம் ராமமூர்த்தி-மாரியம்மாள் ஆகியோரது மகன் முத்துக்குமாருக்கும் திருமண விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் சா.ஜீவபாரதி, மாவட்ட பொருளாளர் என்.கண்ணன், சாலைப்போக்குவரத்து சம்மேளன மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி, ஆட்டோ தொழிலாளர் நகர செயலாளர் கார்த்திக், சிபிஎம் மாநகர செயலாளர் செந்தில்குமார், சிபிஎம் மாநகராட்சி உறுப்பினர் ஆ.செல்வம் உள்ளிட்ட சிஐடியு, சிபிஎம் தோழர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.