districts

img

பூகம்பத்தின் போது உயிர் காக்கும் கருவி பொருத்திய படுக்கை கண்டுபிடிப்பு கும்பகோணம் மாணவர்களுக்கு பாராட்டு

கும்பகோணம், ஜூன் 21 -  கும்பகோணத்தில் தனியார் பொறியியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாண வர்களான எ.அஸ்வின், பி.ராகுல்  மற்றும் எஸ்.அருண் ஆகி யோர் இணைந்து பேராசிரியர் மு.தியாகராஜன் வழிகாட்டுத லின்படி, பூகம்பத்தின் போது உயிர்காக்கும் புதிய படுக்கை ஒன்றை வடிவமைத்துள்ளனர். இயற்கை பேரிடரான பூகம்பம் ஏற்படும் போது மக்களுக்கு பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதத்தை விளைவிக்கிறது. அதனை மனதில் கொண்டு மக்களின் பாது காப்பிற்காக உருவாக்கப்பட்ட இந்த நவீன படுக்கையானது, பூகம்பத்தை துல்லியமாக வும், மிக விரைவாகவும் கண்டறிந்து தானா கவே படுக்கையில் படுத்து இருப்பவரை உள்வாங்கிக் கொண்டு மூடிக் கொள்ளும். இந்தப் படுக்கை, அவர்களுக்கு 3 நாட்களுக்கு  தேவையான ஆக்சிஜன் மற்றும் தண்ணீரை வழங்கி அவர்களின் உயிரை காக்கிறது. மேலும், இக்கருவியானது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செல்பேசிகளால் பூகம்ப இடிபாடுகளில் சிக்கியவர்களின் சரியான  இடத்தை தெரிவிப்பதன் மூலம், பாதிக்கப் பட்டவர்களை எளிதாக  இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்க முடியும்.  இந்த புதிய கருவிகளுடன் கூடிய படுக்கையை கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலை அலுவ லர் சேகர் பார்வையிட்டு, இக்கருவியானது மக்களின் உயிரை பாதுகாக்க மிகவும் பயன்படும் என பாராட்டினார். கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, கல்லூரி வளாகத்தில் தீய ணைப்புத் துறையினர், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு தீ விபத்தின் போது தற்காத்து  கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறை ஒத்திகை நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர்.