தஞ்சாவூர், ஜன.29- இந்திய விமானப்படை குழு ‘ஒய்’ (Y), மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்ப்ப தற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி யாகி உள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமா னப்படை நிலையத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1 முதல் 8 வரையிலான வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளர் (12 ஆம் வகுப்பு மட்டும்) பணிக்கு திருமணம் ஆகாதவராக வும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தி லிருந்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப் பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெற்றவராகவும், 27.06.2002 முதல் 27.06.2006 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். உயரம் 152.5 செ.மீட்டர், இருக்க வேண்டும். இப்பணிக்கு உடல் தகுதி, எழுத்து (2நிலைகள்) மற்றும் மருத்துவ தேர்வு கள் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதி களில் நடத்தப்படும். மருத்துவ உதவியாளர் (டிப்ளமோ, பிஎஸ்சி மருத்துவம்) பணிக்கு அங்கீ கரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 12, டிப்ளமோ, பிஎஸ்சி(பார்மஸி) படித்து முடித்த திருமணம் ஆகாதவர்கள் 27.6. 1999 முதல் 27.06.2004 வரையான காலத்தில் பிறந்தவராகவும், திருமணமான விண் ணப்பதாரர்கள் 27.06.1999 முதல் 27.06.2002 வரையான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். பயிற்சியின் போது உதவித்தொகை யாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். பயிற்சி யின் முடிவில், ராணுவ சேவை ஊதியம் உட்பட குறைந்தபட்ச மொத்த ஊதியம் ரூ. 26,900- ஆகும். இப்பணிக்கு உடல் தகுதி, எழுத்து (2நிலைகள்) மற்றும் மருத்துவ தேர்வுகள் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து விண் ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அல்லது 04364- 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இளைஞர்கள் பயனடை யுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலை வர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.