கும்பகோணம், ஏப்.8- தமிழ்நாடு அரசு ஊழியர்கள், பணியாளர் கள், ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ இயக்கத்தின் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்ற கூட்டத் தொடரில் விவா திக்க கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பி னர் க.அன்பழகன், திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினரும் தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவுமான கோவி.செழியன் ஆகியோரை நேரில் சந்தித்து அரசு ஊழி யர் சங்கம் ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அரசு ஊழியர் சங்க குடந்தை வட்டத் தலைவர் வெங்கடேசன், மருந்தா ளுநர் சங்கம் மாநிலப் பொருளாளர் விஸ்வேஸ் வரன், சாலை ஆய்வாளர் சங்க மண்டலச் செய லாளர் கண்ணன், மாநிலச் செயலாளர் ராஜா, ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், மாவட்டச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் நேரில் மனு அளித்தனர்.