பாபநாசம், டிச.20- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தெருவிற்கு தெரு ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. ஒன்றோ டொன்று தெருவில் சண்டை யிட்டுக் கொள்கின்றன. இத னால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்ற னர். நடந்து செல்வோர் அச் சத்திற்கு உள்ளாகின்றனர். ஆங்காங்கே சாலையில் நாய்கள் படுத்துக் கொள்கின் றன. இதை கவனிக்காமல் மிதித்து விட்டால் கடித்து விடுகின்றன. இரவு நேரங்க ளில் தெருக்களில் நடந்து செல்லவும் முடியவில்லை; வாகனங்களில் செல்ப வர்களையும் துரத்துகிறது. குழந்தைகளால் தெருக் களில் விளையாட முடியவில்லை. பாபநாசம் அரசு மருத்து வமனையில் நாய் கடி ஊசி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாய் களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பாபநாசம் பகுதி பொதுமக்கள் கோரி க்கை வைத்துள்ளனர். நாளுக்கு நாள் தெரு நாய் களின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே செல்கி றது. தஞ்சாவூர் மாவட்ட நிர் வாகம் நாய்களின் தொல் லையிலிருந்து பாபநாசம் பகுதி மக்களை விடுவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.