தஞ்சாவூர், ஜூன் 4 - தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி உள்விளையாட்டு அரங்கத்தினை மேயர் சண்.ராமநாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சியில் பொலி வுறு நகரம் திட்டத்தின் கீழ் 51 ஆவது வார்டில் நிர்மலா நகரில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.1.39 கோடி மதிப் பீட்டில் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி உள் விளையாட்டு அரங்கம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உள் விளையாட்டு அரங் கத்தை வெள்ளியன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாநகர மேயர் சண்.ராம நாதன் திறந்து வைத்தார். மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி பணியா ளர்கள், விளையாட்டு பயிற்சியாளர் கள், பெற்றோர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி அசோசியே சன் செயலாளர் எஸ்.ராஜூ கூறுகை யில், “தஞ்சாவூரில் சர்வதேச தரத்தில் இந்த உள்விளையாட்டு அரங்கம் அமைக் கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை எங்களது அமைப்பிடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. நாங்கள் தஞ்சாவூரில் ஏற்கெனவே 150 மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி வழங்கி வருகிறோம்.
முன்பு சாலையில் பயிற்சி பெற்ற மாணவர்கள், தற்போது இந்த உள் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது மூன்று பயிற்சியாளர்கள் உள்ளோம். தேசிய அளவில் விளையாட தஞ்சாவூரிலிருந்து மூவர் தேர்வு பெற்றுள் ளனர். இது போன்ற உள்விளையாட்டு அரங்கம் சண்டிகர், ஹரியானா, பெங்க ளுரூ ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் முதன் முதலாக வும், அகில இந்திய அளவில் நான்கா வது உள் விளையாட்டு அரங்கமாகவும் இந்த அரங்கம் உள்ளது. தஞ்சாவூரில் உள்ள இந்த அரங்கில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முற்றி லும் இலவசமாக பயிற்சி அளிக்கப்ப டும். இந்த பயிற்சியில் சேர 5 வயது அல்லது 13 கிலோ உடல் எடை இருக்க வேண்டும். பயிற்சி காலை, மாலை நடை பெறும். தஞ்சாவூரில் சர்வதேச தரத்தில் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி உள்விளை யாட்டு அரங்கம் தொடங்கியதை அடுத்து, ஜூலை மாதம் தேசிய அளவில் போட்டிகள் நடைபெறவுள்ளன” என்றார்.