தஞ்சாவூர், ஜூன் 20- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பூதலூர் தெற்கு ஒன்றிய மாநாடு பூதலூர் ரம்யா திருமண அரங்கில் ஒன்றியத் தலைவர் எஸ்.மலர்கொடி தலைமையில் நடைபெற் றது. செயலாளர் வசந்தா கொடியேற்றி வைத் தார். பொருளாளர் அஞ்சலிதேவி வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். மாநாட்டில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ் செல்வி சிறப்புரையாற்றினார். ஒன்றியத் தலைவராக ஆர்.டெய்சி ராணி, செயலாள ராக வ.அஞ்சலிதேவி, பொருளாளராக என்.சபரீஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். “பூதலூர் ஊராட்சியில் தெருக்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும். தடையின்றி குடிநீர் வசதி செய்து தர வேண்டும். சேதமடைந்து கிடக்கும் சாலைகளை புதிதாக அமைத்து தர வேண்டும். மழைநீர் வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரை அப்புறப்படுத்தி, கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க புகை மருந்து அடிக்க வேண்டும். நூறு நாள் வேலையை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். அரசு அறிவித்த சட்டப் பூர்வ கூலி 280-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். இலவச மனைப்பட்டா கேட்டு போராட்டம் நடத்தி மனு அளித்து பல காலமாக காத்திருப்பவர்களுக்கு உடனடி யாக மனைப் பட்டா வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.