தஞ்சாவூர், மார்ச் 16 - நண்பனின் திருமணத்திற்கு புத்தகங்களை சீர்வரிசையாக பள்ளி நண்பர்கள் வழங்கியுள்ள னர். தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த வர் மோகன்குமார்(30). இவர் சென்னை கானாத்தூர் காவல்நிலை யத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்த சாமுண்டீஸ்வரி (24) என்பவருக்கும், தஞ்சாவூரில் புதன் கிழமை (மார்ச் 16) திருமணம் நடந்தது. இந்நிலையில், முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மோகன் குமாரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது மோகன்குமா ரின் பள்ளி நண்பர்கள் ஒன்றி ணைந்து திருக்குறள், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம், காமராஜரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை மேளதா ளம் முழங்க சீர்வரிசையாக கொண்டு வந்து மணமக்களுக்கு வழங்கினர். புத்தகச் சீர் வரிசையை பெற்றுக் கொண்ட மணமக்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்த னர். இதுகுறித்து மோகன்குமாரின் நண்பர்கள் கூறுகையில், தற்போது நண்பர்கள் வழங்கும் வீட்டிற்கு தேவையான பரிசு பொருட்களை மணமக்கள் விரும்புவது இல்லை. அவர்கள் ரசனைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளத்தான் விரும்புகின்றனர். அதே சமயம் தற்போது புத்தகம் வாசிப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது. பணி நேர ஓய்வில்கூட, மொபைல் போனை பார்த்துக் கொண்டிருக்கும் சூழல் உள்ளது. இதனால், மீண்டும் புத்த கங்களை வாசிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் புத்தகத்தை சீராக வழங்கினோம் என்றனர்.