தஞ்சாவூர், ஜூலை 17 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை அருகே கண்ணுக்குடிப்பட்டி பகுதி யைச் சேர்ந்த பலரும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புதன்கிழமை அதி காலை, சுமார் 85 பேர் பாத யாத்திரையாக ஊரில் இருந்து புறப்பட்டு தனித்தனி குழு வாக சென்றனர்.
இந்நிலையில், அதிகாலை சுமார் 6 மணியளவில் திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் மாவட்டம் வளப்பக்குடி பகுதியில் சாலையோரமாக நடந்து சென்றபோது, கரூரில் இருந்து தஞ்சா வூரில் உள்ள கடைகளுக்கு அரிசி மூட்டை களை இறக்கி விட்டு, மீண்டும் கரூருக்கு திரும்பிய டெம்போ வாகனம் நடந்து சென்ற வர்கள் மீது அடுத்தடுத்து மோதி துாக்கி வீசியபடி சென்றது.
இதையடுத்து, நடந்து சென்றவர்கள் பலரும் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அப் போது, டெம்போவை ஓட்டி வந்த கரூரைச் சேர்ந்த செளந்தர்ராஜன் (38) வாகனத்தை நிறுத்தினர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், கண்ணுக்குடிப்பட்டி யைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனா (28), மீனா (26) ஆகிய நான்கு பே ரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிறகு சாலையில் சென்றவர்கள், அப்பகு தியினர் சத்தம் கேட்டு விபத்து நடந்த இடத்தில் காயத்துடன் கிடந்த தனலட்சுமி (37), சங்கீதா (21) இருவரையும் மீட்டு, தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த செங்கிப்பட்டி காவல் துறையினர் ஓட்டுநர் செளந்தரராஜனையும், டெம்போ வாகனத்தையும் மீட்டனர். பிறகு இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக் காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
இதற்கிடையில், விபத்தில் உறவினர்கள் இறந்தது குறித்த தகவலறிந்த கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குவிந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த தன லட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். சங்கீதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
நிவாரணம்
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத் திற்கு தலா ரூ.2 லட்சம், காயடைந்த நபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.