districts

img

சிபிஎம் தொடர் போராட்டம் எதிரொலி இருளில் தவித்த கழுமங்குடா மீனவ மக்களின் வீடுகளில் ஒளியேற்றிய தஞ்சை ஆட்சியர்

தஞ்சாவூர், ஜூன் 23-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மரக் காவலசை ஊராட்சியில் கழு மங்குடா ஐஸ்வாடி கிராம மீனவர் குடி யிருப்பு பகுதியில் 30 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சுமார் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.  இவர்களில் சில குடும்பங்களுக்கு பல்வேறு நிர்வாக சிக்கல்கள் காரண மாக மின் இணைப்பு இல்லாததால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பிள்ளைகள் படிக்க முடியாமலும், டிவி பார்க்க முடியாமலும், செல் போனுக்கு சார்ஜ் போட முடியாமலும்  தவித்து வந்தனர். இப்பகுதி மக்க ளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு கட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி  வந்தது.  இதுகுறித்து, தீக்கதிர் நாளிதழில்  விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து கடந்த சில நாட்க ளுக்கு முன்பு, தஞ்சை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கழு மங்குடா கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்த பின்னர், இப்பகுதிக்கு  மின் இணைப்பு வழங்குமாறு அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.  இதையடுத்து, கடந்த சில தினங்க ளாக மின்கம்பங்கள் நட்டு, மின்  இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வந்தது. அதேபோல் மீனவர் வீடுகளிலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தும் வகையில், மின் விளக்கு கள் பொருத்தும் பணிகள் நடை பெற்று வந்தன.

இந்நிலையில், புதன் கிழமை மாலை 6 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் கழுமங்குடா கிராமத் திற்கு வந்தார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொத்தானை இயக்கி வைத்து ஒவ்வொரு வீடாகச்  சென்று மின்சார வசதியை வழங்கி னார். இதனால் இப்பகுதி மக்கள்  மகிழ்ச்சி அடைந்தனர். வீடுகளில் மின்  விளக்குகள் ஒளிரத் தொடங்கியதும், குழந்தைகள் மகிழ்ச்சியில் ஒலி எழுப்பினர்.  இதில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா,  பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் அனைத்து துறை  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த வர்கள் கூறுகையில், “பல ஆண்டு களாகவே மின் இணைப்பு இல்லா மல் பிள்ளைகள் படிக்க முடியாமல், தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து  வந்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட் டத்தின் காரணமாக, மாவட்ட ஆட்சிய ரின் நேரடி நடவடிக்கையால் மின்சார  வசதி கிடைத்துள்ளது. அதற்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.