கும்பகோணம், டிச.21- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட் டோர் கைத்தறி நெசவாளர் அங்கத்தினராக உள்ளனர். அவர்கள் அன்றாடம் வரவு- செலவுகளை பார்ப்பதற்கும், நெசவா ளர்கள் நெய்த புடவைகளை கொண்டு வந்து கொடுப்பதற்கும் சங்கத்தின் மேல்தளத் தில் இயங்கக் கூடிய வரவு-செலவு அலு வலகத்தை சந்தித்து கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. நெசவாளர்கள் பெரும்பாலானோர் வய தானவர்களாக உள்ளதால், படியேறி மேல் தளத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர்களின் கூட்டமைப்பு சார்பில் 15.11.2022 அன்று வரவு-செலவு நிர் வாகத்தை கீழ்த்தளத்திற்கு மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். பின்னர் வட்டாட்சியர், கைத்தறித் துறை அதிகாரி கள் தலையிட்டு 31.11.22-க்குள் வரவு-செலவு நிர்வாகத்தை கீழ்த்தளத்திற்கு மாற்றப்படும் என உத்தரவாதம் அளித்தனர். அதன் பிறகும் மாற்றாமல் இருந்த தால், 1.12.2022 அன்று கைத்தறி நெசவாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை கைத் தறி அரசு முதன்மைச் செயலாளரை சந் தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது 7.12.2022-க்குள் கீழ்த்தளத்திற்கு மாற்று வதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த னர். ஆனாலும் இதுவரை வரவு-செலவு நிர்வாகத்தை கீழ்த்தளத்திற்கு மாற்றாமல் இருக்கிறது. இதனால், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் எதிரில் 12 கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் தலைமையில் திருபு வனம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் வரவு-செலவு நிர்வாகத்தை கீழ்த்தளத் திற்கு மாற்றுவதாகவும், அதற்கான ஏற்பாடு களை செய்து வருவதாகவும் சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் மீண்டும் ஒப்பு தல் அளித்தார். மேலாண்மை இயக்குநரின் ஒப்புதலை ஏற்று, தற்காலிகமாக உண்ணா விரதப் போராட்டம் ஒத்தி வைத்தனர். போராட்டத்தில் சிஐடியு தஞ்சை மாவட் டத் துணைத் தலைவர் சா.ஜீவபாரதி, கைத் தறி சங்க மாவட்ட நிர்வாகி என்.பி.நாகேந்தி ரன், பக்கிரிசாமி, ஏஐடியுசி மணிமூர்த்தி, காங்கிரஸ் நாராயணசாமி சரவணன் உள் ளிட்ட நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.