தஞ்சாவூர், மார்ச் 13 - தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் வெண்டையம்பட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் சார்பில் மறைந்த தோழர் கே.ரெத்தினம் 45 ஆம் ஆண்டு நினைவு தின புகழஞ்சலிக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர்கள் எம்.பேல்ஸ் ராஜ், எஸ்.சுரேஷ் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் வெ.ஜீவக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் தம்புசாமி, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர் ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றி னர். முன்னதாக, தோழர் கே.ரெத்தினம் நினை விடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.கரிகாலன் மற்றும் கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் சிலர் தங்களை இணைத்துக் கொண்டனர்.