தஞ்சாவூர், ஜூலை 5 - தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவோணம் ஒன்றிய மாநாடு ஊரணிபுரம் ஏ.சி.எம் காம்ப்ளக்சில் நடை பெற்றது. கந்தசாமி தலைமை வகித்தார். ஒன்றி யச் செயலாளர் கே.ரவிச் சந்திரன் முன்னிலை வகித்த னர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டத் துணைச் செய லாளர் எம்.செல்வம், விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். வாசு, விவசாய தொழிலா ளர் சங்கம் ஒன்றிய செயலா ளர் கே.ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றி யத் தலைவராக டி.ஜி.பாஸ்கர், செயலாளராக பி. கோவிந்தராஜ், பொரு ளாளராக கே.ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டில், “திருவோ ணம் ஒன்றியத்தில் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்து தர வேண்டும். நிலுவையில் உள்ள காப்பீட்டு நிவாரணத் தொகையை உட னடியாக வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கம் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.