தஞ்சாவூர், ஏப்.5- தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கத் திட் டத்தை தமிழக முதல்வர் அனுமதிக்க மாட்டார் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரி வித்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: தஞ்சாவூரில் மார்ச் 14 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். அதனுடைய தொடர் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், என் னென்ன திட்டங்கள்? எவ்வளவு முடிக்கப் பட்டுள்ளது? எனக் கேட்டறிந்து, மீதமுள்ள திட்டங்களை விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். பூமாலை வணிக வளாகம், மகளிர் சுய உதவிக் குழுக் கட்டடங்கள் புனரமைப்பு பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், தமிழக முதல்வர் திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் எனவும் கூறியிருக்கிறோம். இது தொடர்பாக அரசு அலுவலர்களும் விளக்கம் அளித்தனர். முதல்வரின் ஆணைப்படி அலுவலர் களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட் டுள்ளன. தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கத் திட் டத்தை தமிழக முதல்வர் கண்டிப்பாக அனு மதிக்க மாட்டார். இது தொடர்பாக பிரத மருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும், சட்டப்பேரவையில் மன்னார்குடி தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக முதல்வர் இத்திட்டத்தை கண்டிப் பாக அனுமதிக்க மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்தி ரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர்கள் என்.ஓ. சுகபுத்ரா, எச்.எஸ். ஸ்ரீகாந்த், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர்கள் அஞ்சு கம் பூபதி, சு.ப.தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.