கும்பகோணம் அக் 27 கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி ஆதிதிரா விடர் மாணவர்கள் விடுதி யில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டிடங்களை சீர மைத்து தரக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் பிர தீப், மாவட்டக் குழு உறுப்பி னர் ராகுல், நகர குழு உறுப்பி னர் ஜேம்ஸ், விடுதி மாணவர் கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கும்பகோணம் சரக டிஎஸ்பி அசோகன் மாணவர்களிடம் சம்பந்தப்பட்ட துறையுடன் பேசி உடனடியாக கோரிக் கைகளை நிறைவேற்றப் படும் என தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக தற்கா லிகமாக போராட்டம் திரும் பப் பெறப்பட்டது இருப்பினும் உடனடி யாக கும்பகோணம் அரசி னர் ஆடவர் கல்லூரி ஆதி திராவிடர் விடுதியில் அடிப் படை வசதிகள் செய்து தரப் பட விடாவிட்டால் ஒட்டு மொத்த கல்லூரிகளில் உள்ள மாணவர்களை திரட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட் டம் நடைபெறும் என தெரி வித்தனர்.