தஞ்சாவூர், ஜூலை 12 - அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில் விவசாய பெண் தொழிலாளர்களின் தஞ்சாவூர் மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. சரிதா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். பிரதீப் ராஜ்குமார் வர வேற்றார். மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், மாநில ஒருங்கிணைப் பாளர் பி. வசந்தாமணி ஆகியோர் துவக்கவுரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டி யன், விதொச மாநிலக் குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளர் ஆர். வாசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட துணைச் செயலாளர் கே. அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர் வெ. ஜீவ குமார் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். மாவட்ட நிர்வாகிகள் வி. தமிழ்ச் செல்வம், ஜி. ஜெய்சங்கர் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட் பங்கேற்று சிறப்புரை யாற்றினார். நிறைவாக மாவட்ட பொரு ளாளர் சி. நாகராஜன் நன்றி கூறினார்.
ஏழைகளைக் குறி வைக்கும் நுண்நிதி நிறுவனங்கள்
“தமிழகத்தில், நூற்றுக்கணக்கான நுண்கடன் நிதி நிறுவனங்கள், குறிப்பாக கிராமப்புற ஏழை விவசாயத் தொழிலாளர்களை குறிவைத்து கடன் வலையில் சிக்க வைக்கின்றன. அதிகபட்ச வட்டியை வசூலிக்கின்றன. இதனால் கடனை அடைக்க முடி யாமல் பெண் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக பெண்கள் மனரீதியாக பாதிக்கப்படு கின்றனர். தற்கொலை சம்பவங்களும் நடைபெறுகின்றன.
எனவே அரசு சுய உதவிக் குழுக்களுக்கு நேரடியாக குறைந்த வட்டியில் கடன் வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். முறையான வங்கிக் கடன் கள் கிடைக்காத சூழலில் நுண்நிதி நிறு வனங்களின் பிடிக்குள் பெண் தொழி லாளர்கள் சிக்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
நூறு நாள் வேலையை தாமத மின்றி உடனடியாகத் தொடங்கி, வேலை அட்டை வைத்துள்ள அனை வருக்கும் வேலை வழங்க வேண்டும். சட்டபூர்வக்கூலி ரூபாய் 319 வழங்க வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாகவும், கூலியை 600 ஆகவும் உயர்த்தி தரவேண்டும். தமிழ்நாடு அரசு கூறியபடி கூலியை ரூ.400 ஆக வழங்க வேண்டும்” என்று மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆக. 9-15 நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
பொதுச்செயலாளர் பி. வெங்கட் தகவல்
முன்னதாக விதொச அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒன்றிய அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது. வருகிற நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டை கூடுதலாக்கி அறிவிக்க வேண்டும். அகில இந்திய அளவில், விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தித் தர வேண்டும். ஒன்றிய அரசு ஏற்கனவே உறுதி அளித்தவாறு, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தரவேண்டும். வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி அளித்த பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 9 முதல் 15 வரை அகில இந்திய அளவில் பிரச்சார இயக்கம் நடத்தப்படும்” என்றார்.
பட்டியலின மக்களுக்கு நிலம்
மேலும், “தமிழகத்தைப் பொறுத்தவரை நிலம் இல்லாத விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும், குறிப்பாக பட்டியல் இன மக்களுக்கு, கோவிலில் பயன்பாடு இல்லாத நிலங்களை வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். தமிழகத்தில் இருக்கின்ற விவசாயத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்” என்றார்.