districts

img

விலைவாசி உயர்வுக்கு எதிராக மாதர் சங்கம் பிரச்சார இயக்கம்

தஞ்சாவூர், டிச.9 -  விண்ணை முட்டும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கோரி மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சை மாவட்டக் குழு சார்பாக திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சை ரயிலடி மற்றும்  பழைய பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ. வசந்தி, மாவட்டத் தலை வர் (பொ) ஆர்.கலைச்செல்வி, மாவட்ட நிர்வாகிகள் டி. வசந்தி, எஸ்.வனரோஜா, மாநகரத் தலைவர் பி.புனிதா, மாவட்டக் குழு உறுப்பினர் சுந்தரி, மாநகராட்சி 35 ஆவது வார்டு கவுன்சிலர் எம்.வைஜெயந்திமாலா உள்ளிட்ட பலர் பங்கேற்று, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர்.

ஒன்றிய அரசு தனது  பொருளாதார கொள்கை களை மாற்றிக் கொள்ள வேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய  வேண்டும்.  ரேசன் முறையை  பலப்படுத்த வேண்டும்.  அனைத்து பொருட்களை யும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். வேலை  வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.